முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிணைக் தைதிகளை மீட்கும் முயற்சியை கைவிட மாட்டோம்

ஞாயிற்றுக்கிழமை, 25 ஜனவரி 2015      உலகம்
Image Unavailable

டோக்கியோ - இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளிடம் பிணைக் கைதிகளாக உள்ள தங்கள் நாட்டினர் இருவரையும் மீட்கும் முயற்சியைக் கைவிட மாட்டோம் என ஜப்பான் வெளியுறவு இணை அமைச்சர் யாசுஹிடே நாகயாமா  கூறியது.

ஐஎஸ் அமைப்பு இணையதளங்களில்  கடந்த வாரம் வெளியிட்ட வீடியோவில், ஜப்பான் அரசு 72 மணி நேரத்துக்குள் 20 கோடி டாலர்களை பிணையத் தொகையாக அளிக்காவிட்டால், தங்களிடமுள் கென்ஜி கோடோ, ஹருளா யுகாவா ஆகிய ஜப்பானியர்களைக் கொல்லப்போவதாக மிரட்டல் விடுத்தது. பயங்கரவாதிகல் விதித்த கெடு கடந்துவிட்டபோதும், அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் இல்லாத நிலையில், இறு பிணைக் கைதிகளையும் மீட்கும் முயற்சியைக் கைவிடப் போவதில்லை. என ஜப்பான் வெளியுறவுத் துறை இணையமைச்சர் யாசுஹிடே நாகயாமா தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், பிணைக் கைதிகள் இருவரையும் மீட்பது மிகவும் சிக்கல் நிறைந்த பணியாகும். நாங்கள் அதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். அந்த முயற்சியை ஒருபோதும் கைவிட மாட்டோம் என்றார் நாகயாமா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து