முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீரங்கம்: நாச்சிக்குறிச்சி கிராமத்தில் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரிப்பு

வியாழக்கிழமை, 5 பெப்ரவரி 2015      அரசியல்
Image Unavailable

திருச்சி - ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாச்சிக்குறிச்சி கிராமத்தில் அதிமுக வேட்பாளர் வளர்மதியை ஆதரித்து 15வது நாளாக கழக அம்மா பேரவை செயலாளரும், தமிழக வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் நேற்று அந்த கிராமத்தில் ஏறத்தாழ 20க்கும் மேற்பட்ட தெருக்களில் சிவகங்கை எம்.பி. செந்தில்நாதனுடன் இணைந்து அதிமுகவுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை வாசுகி, மற்றும் மகளிர் அணியினர் கரகாட்ட நிகழ்ச்சியுடன் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டி வீடு, வீடாக ஓட்டுக்கேட்டனர். முன்னதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கழக அம்மா பேவரை சார்பில் மக்கள் முதல்வர் ஜெயலலிதா அரசின் சாதனைகளை வீளக்கும் துண்டு பிரசுரங்களை கிராம மக்களுக்கு வீடு, வீடாக வழங்கி அம்மாவின் சாதனைகள் தொடர கேட்டுக்கொண்டனர்.

நாடார்சத்திரம், ஜோதிநகர், கோனார் தெரு, ஈடன்கார்டன்பகுதி, அல்அமீன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த வாக்கு சேகரிக்கும்நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நாச்சிக்குறிச்சி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் முதல்வர் அம்மா பெயரில் நடைபெற்றது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து