எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முன்னோடி நிலையில் உள்ளது.என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவி த்துள்ளார்.
சட்டசபையில் நேற்று சட்டசபையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:,
புதிய தொழில் தொடங்குவதன் மூலம் மாநிலம் வளர்ச்சி பெறுவதுடன், வேலைவாய்ப்பும் உருவாக்கப்படுவதால், தொழில்கள் தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலையை, மாண்புமிகு அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்த அரசு தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. புதிய தொழில் கொள்கை, வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் கொள்கை, மற்றும் உயிரி தொழில்நுட்பக் கொள்கை ஆகியவை 2014 ஆம் ஆண்டு இதயதெய்வம் அம்மா அவர்களால், வெளியிடப்பட்டன. தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை 2012 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
இதுவன்றி, தனியார் துறையில் முதலீடுகளை ஈர்க்க, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டுச் சட்டம் 2012, என்னும் சட்டம் கொண்டுவரப்பட்டு, தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. உள்கட்டமைப்புத் திட்டங்களில் தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்கு, இது வகை செய்கிறது.
தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதற்குத் தேவையான உகந்த சூழல் நிலவுவதாலும், நாட்டின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலம் பேணுகிற சமூக, பொருளாதார சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாலும், முதலீட்டாளர்கள் அனைவரும் விரும்பி வந்து தொழில் முதலீடு செய்கிற பாதுகாப்பான இடமாக, தமிழ்நாடு விளங்குகிறது. மாநிலங்களின் வளர்ச்சி அளவைகளின்படி, தமிழ்நாடு முன்னோடி நிலையில் உள்ளது.
இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில் அமைச்சகத்தைச் சேர்ந்த, தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையால் வெளியிடப்பட்ட, அந்நிய நேரடி முதலீட்டு புள்ளி விவரங்களின்படி, அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில், மகாராஷ்டிரம், புதுடெல்லி ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து, தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. மே 2011 முதல் நவம்பர் 2014 வரையிலான கால கட்டத்தில், தமிழ்நாடு 48 ஆயிரத்து 192 கோடி ரூபாய் அளவிற்கு அந்நிய முதலீடுகளை ஈர்த்துள்ளது.
இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (ஊஆஐநு) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கடந்த 2011 ஆம் ஆண்டு கு அம்மா அவர்களின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல், செப்டம்பர் 2014 வரையிலான காலக் கட்டத்தில், தமிழ்நாடு ஈர்த்துள்ள கூடுதல் முதலீடு 2 லட்சத்து 58 ஆயிரத்து 382 கோடி ரூபாயாகும். இந்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்பவர்கள், ஊஆஐநு-ன் இணைய தளத்திலிருந்து அதனைத் தெரிந்து கொள்ளலாம்.
முதலீடுகளை ஈர்ப்பதில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு உள்ளது.
இந்திய அரசின் தொழில் கொள்கை - உருவாக்கத் துறை வெளியிட்ட, """"தொழில் நிதி உதவிக்கான செயலகம் (ளுஐஹ) புள்ளி விவரங்கள்"" என்னும் நூலில், முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் மிகவும் விரும்பித் தேர்ந்தெடுக்கும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாண்புமிகு அம்மா அவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டுள்ளது. இவற்றின் முதலீட்டு அளவு 31 ஆயிரத்து 706 கோடி ரூபாயாகும். இது தவிர, தொழில் துறையின் கீழ் உள்ள, வழிகாட்டு மையம் , ஒற்றைச் சாளர முறையின் வாயிலாக 42 திட்டங்கள் மூலம், கூடுதலாக 9 ஆயிரத்து 379 கோடி ரூபாய் ஈர்த்துள்ளது. மொத்தத்தில் கடந்த 3 ஆண்டுகளில், 75 திட்டங்களின் வாயிலாக ஈர்க்கப்பட்ட மொத்த முதலீடு 41 ஆயிரத்து 85 கோடி ரூபாயாகும். இது தவிர, 17 ஆயிரத்து 134 கோடி முதலீடு செய்வதற்கு, 7 புதிய திட்டங்களுக்கு, அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்வின் போது கையெழுத்திடப்படும்.
முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமும், அரசாணைகள் மூலமும் ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்த முதலீட்டுத் தொகை 66 ஆயிரத்து 664 கோடி ரூபாய் ஆகும். ஆனால் இதில் 15 ஆயிரத்து 982 கோடி ரூபாய்க்கான 12 தொழில்கள் தொடங்கப்படவே இல்லை. எஞ்சிய 50 ஆயிரத்து
682 கோடி ரூபாயில், நான்காயிரம் கோடி ரூபாய், ஹூண்டாய் நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமும் அடங்கும். 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், பரிசீலனையில் இருந்து, தொழில் துவங்கப்பட்ட இந்த ஹூண்டாய் நிறுவனம், 2.2.2008-ல் உற்பத்தியை தொடங்கியுள்ளது.
ஏற்கெனவே துவங்கப்பட்ட இதனையும் நீக்கி விட்டால், எஞ்சிய தொகை 46 ஆயிரத்து 682 கோடி ரூபாய் தான். அதிலும் மைனாரிட்டி திமுக ஆட்சி முடியும் வரை செய்யப்பட்ட முதலீடு, 25 ஆயிரத்து 126 கோடி ரூபாய் தான். ஆனால் மே 2011 முதல் டிசம்பர் 2014 வரை செய்யப்பட்ட முதலீடு, 28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஆகும்.
ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஏதுவாக, ஜப்பான் வெளி வர்த்தக அமைப்பு சென்னையில் ஒரு வர்த்தக ஆதரவு மையத்தினை ஏற்படுத்தியுள்ளது. 2011-ஆம் ஆண்டு மே மாதம், மாண்புமிகு அம்மா அவர்களது தலைமையில் அரசு பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாடு அரசு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் ஆதரவுடன், 970 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது சுமார் 5 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 18 ஜப்பானிய பெரும் தொழில் நிறுவனங்களை நிறுவ, ஜப்பான் வர்த்தக அமைப்பு, வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இவை தவிர, 300க்கும் அதிகமான ஜப்பானிய நிறுவனங்கள், தமிழ்நாட்டில் அமையப் பெற்றுள்ளன. ஜப்பானிய நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது.
புதிய தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டு, புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளதால், வேலை வாய்ப்பும் பெருகி உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், ன் கணக்குப்படி, 31.3.2006 நாளைய நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை, 55 லட்சத்து 10 ஆயிரமாகும். 31.3.2011 நாளைய நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட மொத்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 84 லட்சத்து 21 ஆயிரத்து 904 ஆகும். அதாவது, முந்தைய திமுக ஆட்சியில் பதிவுடன் ஏற்படுத்தப்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் 29 லட்சத்து 12 ஆயிரம் ஆகும். 31.12.2014 அன்றைய நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை, 1 கோடியே 64 லட்சத்து 38 ஆயிரத்து 84 ஆகும். அதாவது, கடந்த நான்காண்டுகளில், 80 லட்சத்து 16 ஆயிரத்து 180 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தென் மாவட்டங்களான, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் தொழில் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டால், தென் தமிழகமும் தொழில் வளர்ச்சி அடையும் என்பதால், இந்தப் பகுதிகளில் தொழில் துவங்க முனைவோருக்கு, பல்வேறு சலுகைகளை, மக்கள் முதல்வர் புரட்சித் தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்தப் பூங்காக்களை ஏற்படுத்தும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொழில் வளர்ச்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பெரிதும் உதவி வருவதால், அவைகளை ஊக்குவிக்கும் வகையில் சுலபமான கடன் வசதி, தொழில்நுட்ப வசதி, எளிய விற்பனை வசதி, கட்டமைப்பு வசதிகள் போன்ற, பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு வருகின்றன. புதிதாக துவங்கப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, வழங்கப்படும் முதலீட்டு மானியம் 15 விழுக்காட்டிலிருந்து
25 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது. 5 ஆயிரத்து 593 நிறுவனங்களுக்கு 230 கோடியே 30 லட்சம் ரூபாய் முதலீட்டு மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
வேலையில்லா இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ்,
1 லட்சம் ரூபாய் முதல்5 லட்சம் ரூபாய் வரையிலான முதலீட்டில் தொழில் நிறுவனங்களை அமைக்க முன்வருவோருக்கு, திட்ட மதிப்பீட்டில் 15 விழுக்காடு அல்லது அதிகபட்சம் 75 ஆயிரம் ரூபாய் என்றிருந்த மானிய உதவி,
25 விழுக்காடு அல்லது அதிகபட்சம் 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என, கடந்த ஆண்டு முதல், உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இது வரை, 2 ஆயிரத்து 63 தொழில் முனைவோருக்கு 9.56 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு, மாண்புமிகு அம்மா அவர்களது தலைமையில் இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இது வரை, 685 ஏக்கர் பரப்பில் 14 புதிய தொழிற் பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 14 இடங்களில் 19 கோடி ரூபாய் செலவில், தொழிற் பேட்டைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. சிட்கோ நிறுவனத்தால் 247 கோடி ரூபாய் மதிப்பில், 590 தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன; 11 கோடி ரூபாய் மதிப்பிலான 26 தொழிற்கூடங்கள் தொழில் முனைவோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
2006 முதல் 2011 வரையிலான, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில், தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 160 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மட்டுமே புதிதாகப் பதிவு செய்யப்பட்டன. ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்கள் 2011-ஆம் ஆண்டு மூன்றாம் முறையாக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல், 2015 ஆம் ஆண்டு ஜனவரி வரை, மொத்தம் 3.94 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் பதிவானதை விட, கூடுதலாக 2.16 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை, மிகவும் பெருமையுடன் இந்த அவையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
முனைப்பான மின் திட்டங்கள்
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,
2011 ஆம் ஆண்டு மே மாதம், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையில் அ.இ.அ.தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்னர், 4 ஆயிரத்து 640 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டு, தற்போது கிடைத்து வருகிறது. இது தவிர, வல்லூர் மூன்றாம் அலகிலிருந்து, நமது பங்காக 350 மெகாவாட் மின்சாரம், இன்னும் சில நாட்களில் கிடைக்கப் பெறும். மேலும், 2 ஆயிரத்து 163 மெகாவாட் மின்சாரம் இன்னும் சில மாதங்களில் கிடைக்கும்.
இது தவிர, 660 மெகாவாட் திறன் கொண்ட, எண்ணூர் அனல் மின் திட்டம், 1,320 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டம், என 1,980 மெகாவாட் திறன் கொண்ட திட்டங்களுக்கான பணிகள் துவக்கப்படவுள்ளன.
இது தவிர, எண்ணூர் மாற்று அனல் மின் திட்டம் மற்றும் உப்பூர் அனல் மின் திட்டம் ஆகியவற்றின் மூலம், 2 ஆயிரத்து 260 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், வடசென்னை அனல் மின் திட்டம் மூன்றாம் நிலை (800 மெகாவாட்), உடன்குடி அனல் மின் திட்டம் விரிவாக்கம் (2 ஒ 660 மெகாவாட்), தூத்துக்குடி அனல் மின் திட்டத்திற்கான மாற்று திட்டம் (2 ஒ 660 மெகாவாட்) என மொத்தம் 3 ஆயிரத்து 440 மெகாவாட் மின்சார திட்டங்களுக்கான சுற்றுச் சூழல் அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவன்றி, மத்திய அரசால் நிறைவேற்றப்படவுள்ள 4,000 மெகாவாட், செய்யூர் அனல் மின் நிலையத்தில் நமது பங்காக 1,600 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைக்கப் பெறும். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் அரசால் முடிக்கப்பட்டுள்ளன.
இது மட்டுமல்லாமல், 2000 மெகாவாட் திறனுள்ள சில்லஹல்லா நீரேற்றும் மின் திட்டத்திற்கான ஆய்வுப் பணி, மற்றும் 500 மெகாவாட் திறனுள்ள, குந்தா நீரேற்றும் மின் திட்ட பணிகள், ஆகியவை முனைப்புடன் நடைபெற்று வருகின்றன. மேலும், 3 ஆயிரத்து 330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு, நீண்ட கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் வாங்குவதற்கு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆக மொத்தத்தில், 16 ஆயிரத்து 33 மெகாவாட் அனல் மின் உற்பத்திக்கும்,2 ஆயிரத்து 607 மெகாவாட் புனல் மின் உற்பத்திக்கும், நீண்ட காலக் கொள்முதல் மூலம் 3 ஆயிரத்து 300 மெகாவாட், மற்றும் நடுத்தர கால கொள்முதல் மூலம்,
500 மெகாவாட், என மொத்தம் 22 ஆயிரத்து 440 மெகாவாட் மின்சாரம் கிடைக்க இந்த அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு பொறுப்பேற்ற பின்னர், இது வரை முடிக்கப்பட்ட திட்டங்கள், நடுத்தர கால மற்றும் நீண்டகாலக் கொள்முதல் ஆகியவற்றின் வாயிலாக 4 ஆயிரத்து 640 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது. எனவே தான், மின் பற்றாக்குறை வெகுவாக குறைக்கப்பட்டு, மின் தேவையை முழுவதும் பூர்த்தி செய்யும் நிலையை, எட்டிக் கொண்டு இருக்கிறோம். !இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.