முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி மலேசிய அரசின் சார்பாக இரங்கல் கடிதம்: ஒ.பன்னீா்செல்வத்திடம் வழங்கப்பட்டது

திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி மலேசிய அரசின் சார்பாக முதல்வர் ஒ.பன்னீா்செல்வத்திடம் நேற்று இரங்கல் கடிதம் அளிக்கப்பட்டது.

முதல்வர் ஒ.பன்னீா்செல்வத்தை தலைமைச் செயலகத்தில் நேற்று சந்தித்த மலேசிய நாட்டு கல்வித்துறை துணை அமைச்சர் தத்தோ கமலநாதன், முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி மலேசிய அரசின் சார்பாக இரங்கல் தெரிவித்துக்கொண்டு, மலேசியன் இந்தியன் காங்கிரஸ் தலைவரும், மலேசியா நாட்டின் சுகாதார துறை அமைச்சருமான தத்தோ ஸ்ரீ சுப்பிரமணியன், அளித்த இரங்கல் கடிதத்தை முதல்வரிடம் வழங்கினார்.

இந்த சந்திப்பின்போது மலேசிய நாட்டிற்கான இந்திய தூதா் பசாரசம், மலேசிய நாட்டு கல்வித்துறை துணை அமைச்சரின் சிறப்பு அலுவலா் தினேஷ் தினகரன், தலைமைச் செயலாளர் ராமமோகனராவ், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலாபாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனா்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்