முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை - ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்குவதற்காக தமிழக சட்டசபையில் கடந்த 23-ம் தேதி அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்தார். இச்சட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது

புதிய சட்டம் நிறைவேற்றம்
ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்குவதற்காக தமிழக சட்டசபையில் கடந்த 23-ம் தேதி அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்துக்கு முறைப்படி ஒப்புதல் பெற அது அன்றே மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சட்டத்துக்கு ஒப்புதல்
தமிழக அரசின் சட்டம் பற்றி முதலில் உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது. அதில் திருப்தி தெரிவித்து ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து சட்டத்துறை, சுற்றுச்சூழல் துறை, கலாச்சாரதுறை ஆகிய மூன்று துறைகளுக்கும் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மூன்று அமைச்சகங்களும் தமிழக அரசின் சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கின.நேற்று முன்தினம் ஒரே நாளில் இவை அனைத்தும் முடிந்தன.

ஜனாதிபதி ஒப்புதல்
இதைத்தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று இந்த சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கினார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சார்பில் மத்திய உள்துறை அமைச்சகமே இதற்கான பணிகளை செய்தது தற்போது தெரிய வந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அந்த சட்டத்தை தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது. அந்த மசோதாவில் தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் கையெழுத்திடுகிறார்.

நாளை முதல்...
கவர்னர் ஒப்புதல் அளித்ததும் ஜல்லிக்கட்டு சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துவிடும். நாளை முதல் அந்த சட்டம் அமலுக்கு வருகிறது. வழக்கமாக மாநில அரசுகள் உருவாக்கும் சட்டங்கள், நீண்ட ஆய்வுக்குப் பிறகே மத்திய அரசாலும், ஜனாதிபதியாலும் ஒப்புதல் அளிக்கப்படும். ஆனால் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு மத்திய அரசு 6 நாட்களில் ஆலோசனை செய்து ஒப்புதல் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக இளைஞர்கள், மாணவர்களின் உணர்வுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

அனைத்து தடைகளும் நீங்கின
மேலும் ஜல்லிக்கட்டு அவசரச்சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்குகள் மீது நாளை விசாரணை நடைபெறவிருக்கிறது. அப்போது ஜல்லிக்கட்டு அவசர சட்டம் தற்காலிகமானது என்று கூறி தடை வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அதை முறியடிக்கவே மத்திய அரசு தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு விரைவாக ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக ஜல்லிக்கட்டுக்கு இருந்த அனைத்து தடைகளும் தற்போது நீங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago