முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொது விருந்து

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2017      தூத்துக்குடி
Image Unavailable

திருச்செந்தூர்,

 

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றம் பொது விருந்து நடந்தது. இதையட்டி கோவில் வளாகத்தில் உள்ள கந்தவேல் சஷ்டி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு திருச்செந்தூர் உதவி கலெக்டர் தியாகராஜன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன் ஏழைகளுக்கு வேஷ்டி, சேலை வழங்கினார். தொடர்ந்து பொது விருந்து நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில், இணை ஆணையர் வரதராஜன், உதவி ஆணையர் அருணாசலம், கண்காணிப்பாளர் சுப்பையன், கோவில் மக்கள் தொடர்பு அலுவலர் மாரிமுத்து, ஒன்றிய அதிமுக செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் ஜெபமாலை. முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் மு.சுரேஷ்பாபு மற்றும் கோவில் பணியாளர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்