எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது விவசாயிகளின் கவனம் அங்கக வேளாண்மை என்னும் இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்துவது சவாலாகவே இருந்துவருகிறது. எனினும் சில குறிப்பிட்ட உயிரியல் மருந்துகள் (காரணிகள்) , இயற்கை விவசாயம் செய்பவர்களுக்கு உற்ற தோழனாக இருந்து வருகின்றன.
இதுகுறித்து நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குனர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளதாவது. : ‘வேளாண்மையில் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை அளவு கடந்து பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு மண்வளம் குன்றி, நீர்வளமும் பாதிப்பு அடைகின்றன. இரசாயன வகைஇடுபொருள்களை வயல்களில் பயன்படுத்துவதை தவிர்த்து பயிர் சுழற்சி, இயற்கை உரங்கள், இயற்கைப் பூச்சி, நோய் மருந்துகளைப் பயன்படுத்துதல் போன்ற இயற்கை வேளாண்மை முறையை தற்போது பல விவசாயிகள் கடைப்பிடித்து வருகிறார்கள். இதில் பல்வேறு நோய்களைத் திறம்படக் கட்டுப்படுத்துவதில் ‘டிரைகோடெர்மா விரிடி” மற்றும் ‘சூடோமோனாஸ்” - என்ற இரண்டு உயிரியல் மருந்துகளும் இயற்கை விவசாயத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.
1.டிரைகோடெர்மா விரிடி (டி.விரிடி) : இது ஒரு நன்மை செய்யும் பூஞ்சாணம் ஆகும். பவுடர் வடிவத்திலும், திரவமாகவும் கடைகளில் கிடைக்கிறது. விதை, வேர், இலைகளில் உள்ள தீமைசெய்யும் பூஞ்சாணங்கள் - அதாவது நோய் ஏற்படுத்தும் கிருமிகள் மீது இந்த உயிரியல் பூஞ்சாண மருந்து சிறப்பாக செயல்பட்டு நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக வேர் அழுகல், தண்டு அழுகல் நோய் (நிலக்கடலை, எள் பயறுவகைகள் காய்கறிகள் பயறுவகை, பழங்கள்) – போன்ற நோய்களிலிருந்து பயிர்களைக் காக்கிறது. மேலும் விதை முளைத்தலைத் தூண்டுவதுடன், பூக்கள் உருவாவதையும், பயிர் வளர்ச்சியையும் தூண்டி மகுந்த நன்மை செய்கிறது. மேலும் இது மனிதர்கள், விலங்குகள், தேனீக்கள், பறவை, மீன்களுக்கும் தீங்கு விளைவிப்பதில்லை.
இதை உயிர் உரங்கள் (அசோஸ்பைரில்லம், ரைசோபியம்.... போன்றவை) தொழு உரம், இயற்கை உரங்களுடன் கலந்து பயன்படுத்தலாம். திரவ வடிவில் டிரைகோடெர்மா விரிடியைப் பயன்படுத்தும் போது வெகு எளிதில் பயிர்களின் மீது பட்டுப் பரவி நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இதில் என்சைம்களின் செயல்பாடு அதிகமாக இருக்கும் மேலும், 70 டிகிரி செல்சியஸ் வெப்பத்தையும் தாங்கி செயல்படக்கூடியதாகும்.
பயன்படுத்தும் முறை : ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் அரிசிக்கஞ்சி சிறிதளவு சேர்த்து விதைகளுடன் நன்கு கலந்து ஒரு நாள் வைத்திருந்து, விதைக்கும் போது, விதைகள் மற்றும் மண் மூலம் பரவும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும், மட்கிய குப்பையுடன் ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் டிரைகோடெர்மா விரிடியை கலந்து அடியுரமாக இடும்போது நல்ல பலன் கிட்டுகிறது. திரவ வடிவில் ஏக்கருக்கு 100 மில்லி டி.விரிடி மருந்தை தண்ணீரில் கலந்து பயிர்களின் மீது தெளிக்கும் போது, நோய்கள் நன்கு கட்டுப்படுத்தப்படுகிறது. டி.விரிடியைப் பயன்படுத்தும் போது இரசாயன பூஞ்சாண மருந்துகளை சேர்த்துக் கலந்து தெளிக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
டி.விரிடியை நோய் உண்டாக்கும் பூஞ்சாணங்களின் செல்சுவரைக் கரைத்து நச்சுப் பொருள்களை சுரந்தும் நோய்காரணிகளை அழிப்பதாலும், மண் வழிப்பரவும் நோய்க்கிருமிகள் நுழையாதவாறு பயிர்களின் வேர்களுக்கு புறப்பாதுகாப்பை அளிப்பதாலும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
2. சூடோமோனாஸ் ‡புளோரோசன்ஸ் : இது ஒரு நன்மை செய்யும் பாக்டீரியா ஆகும். இது தூள் மற்றும் திரவ வடிவில் கிடைக்கிறது. இதன் மூலம் தீமை செய்யும் பல்வேறு பாக்டீரியாக்களும், தீமை செய்யும் பல்வேறு பூஞ்சாணங்களும் கட்டுப்படுத்தப்பட்டு நோய்களிலிருந்து பயிர்களை காக்கிறது. சூடோமோனாஸ் நெல், கரும்பு, பருத்தி, பயறு வகைகள், நிலக்கடலை, எள், காய்கறிகள், மஞ்சள், வாழை, தென்னை – உட்பட பல்வேறு பயிர்களில் ஏற்படும் இலைப்புள்ளி, இலைக்கருகல், குலைநோய், வாடல்நோய், நாற்றழுகல் மற்றும் கிழங்கு அழுகல் போன்ற பல்வேறு நோய்களை சிறப்பாகக் கட்டுப்படுத்துகிறது.
நோய் உண்டாக்கும் கிருமிகளின் செல்சுவரை கரைக்கும் ‘என்சைம்களை” உற்பத்தி செய்தும், ‘ஹைட்ரஜன் சயனைடு” மற்றும் இரும்புச் சத்தினை தக்க வைக்கும் ‘சிட்ரோபோர்கள” – ஆகியனவற்றை உற்பத்தி செய்தும் நோய்களை அழித்து பயிர்களைக் காக்கிறது. மேலும், தாவர வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்து பயிர் விளைச்சலை அதிகரிக்கிறது.
பயன்படுத்தும் முறை : ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் ஆறிய அரிசிக்கஞ்சியுடன் „சூடோமோனாஸ்;… கலந்து பின் விதைக்கலாம். ஒரு கிலோ „சூடோமோனாஸ்;… உடன் தேவையான தண்ணீர் கலந்து ஒரு ஏக்கருக்கான நாற்றுக்கள் ஃ கிழங்கு ஃ விதைக் கரனைகளை நனைத்து அரை மணி நேரம் வைத்திருந்து பிறகு நடவு செய்யலாம். இலைமேல் தெளிப்பதற்கு ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் கரைத்து 2 -3 முறை தெளிக்கலாம். மேலும், நடவு வயலில் இடுவதற்கு ஏக்கருக்கு 1 முதல் 2 கிலோ ‘ ‘சூடோமோனாஸ்;” - தூளை மட்கிய தொழுஉரத்துடன் கலந்து இடலாம். இதை உயிர் உரத்துடன் கலந்தும் பயன்படுத்தலாம்.
எனவே, இயற்கை விவசாயத்தையும், அங்கக வேளாண்மையும் விரும்பும் விவசாயப்பெருமக்கள் மேற்கண்ட இரண்டு முக்கியமான உயிரியல் மருந்துகளை பல முறைகளில் பயன்படுத்தி, மிகக் குறைந்த செலவில் எண்ணற்ற பலன்களை அடையலாம்”
இவ்வாறு நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.
கோபி சிவம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.