முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை பலப்பரீட்சையில் வெற்றிபெறுவேன்: பாரிக்கர்

புதன்கிழமை, 15 மார்ச் 2017      அரசியல்
Image Unavailable

பனாஜி, சட்டசபையில் இன்று நடக்கவிருக்கும் பலப்பரீட்சையில் வெற்றி உறுதி என்று கோவா பா.ஜ.க. முதல்வர் மனோகர் பாரிக்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கோவா மாநிலத்தில் பாரதிய ஜனதா 13 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. ஆனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாரதிய ஜனதா அரசு பதவி ஏற்றுள்ளது. முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவி ஏற்றுள்ளார். இதற்காக ராணுவ அமைச்சர் பதவியை பாரிக்கர் ராஜினாமா செய்துவிட்டார். சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி இன்று சட்டசபையில் மெஜாரிட்டியை பாரிக்கர் நிரூபிக்க வேண்டும்.

அதனையொட்டி கோவா சட்டசபை இன்று கூடுகிறது. சபை கூடியதும் நடைபெறும் பலப்பரீட்சையில் மெஜாரிட்டியை நிரூப்பிப்பேன் என்று முதல்வர் மனோகர் பாரிக்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பலப்பரீட்சை முடிந்தவுடன் சட்டசபை வரும் 22-ம் தேதி வரை ஒத்திவைக்கப்படும். 23-ம் தேதி மீண்டும் சட்டசபை கூடுகிறது. முதல் நாள், சபையில் கவர்னர் உரையாற்றுவார். அடுத்தநாள் (24-ம் தேதி) மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று பாரிக்கர் தெரிவித்தார். மேற்கு கடற்கரையோர மாநிலமான கோவாவின் முதல்வராக 4-வது முறையாக பாரிக்கர் பதவி ஏற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்