எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆர்.கே.நகர் தொகுதியில் எனது வெற்றி பிரகாசமாக உள்ளது என்று வேட்பாளர் மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணி சார்பாக போட்டியிடும் மதுசூதனன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் எனது வெற்றி பிரகாசமாக உள்ளது என்றார்.
இ.மதுசூதனன் தொகுதி முழுவதும் சூறவாளி பிரசாரம் செய்து இரட்டை மின் விளக்கு கம்பம் சின்னத்துக்கு ஆதரவு திரட்டி வருகிறார். கொளுத்தும் வெயிலிலும் வீடு வீடாக சென்று அம்மா ஆட்சியின் சாதனைகளை பெண்களிடம் விளக்கி கூறி வாக்கு சேகரித்து வருகிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வேட்பாளர் இ.மதுசூதனன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி:- தேர்தலில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்:- மக்களின் எண்ணங்களை உணர்வுகளை தொகுதி முழுவதும் சுற்றி அலசி ஆராய்கின்றவர்கள் நீங்கள். நீங்கள் தான் அந்த உண்மையை மறைக்காமல் நாட்டுக்கு சொல்ல வேண்டும். முழு பூசணிக்காயை யாராலும் சோற்றில் மறைக்க முடியாது எனது வெற்றி வாய்ப்பானது அண்ணன் ஓ.பி.எஸ். தலைமையின் மூலமாக பிரகாசமாக உள்ளது. அம்மா அவரது அமைச்சரவையில் இடம் கொடுத்தார். 2015-ம் ஆண்டு அம்மா ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது என்னைத்தான் மாற்று வேட்பாளராக நிறுத்தினார். அதன்பின் 2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் அம்மா ஆர்.கே.நகரில் போட்டியிட்டபோதும் என்னைத்தான் மாற்று வேட்பாளராக அறிவித்தார். அது மட்டுமின்றி என்னுடைய வெற்றிப் படிவத்தை அதிகாரியிடம் நீ தான் பெற்று என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கட்டளையிட்ட தலைவிதான் புரட்சித்தலைவி அம்மா.போயஸ் தோட்ட இல்லத்தில் நான் வெற்றி படிவத்தை அவரிடம் கொடுத்த போது, மகிழ்ச்சியின்றி பெற்றுக்கொண்டார். எல்லோரையும் விலகி நிற்க சொல்லி விட்டு உணர்ச்சி பெருக்குடன், அதனை வெளிக் காட்டாமல் மது, நான் உன்னிடம் நிறைய பேச வேண்டியுள்ளது ஒட்டு மொத்த சென்னை மாவட்டத்தில் நம் கட்சியை சீர் குலைத்து விட்டார்கள். அதை சரி செய்ய வேண்டும் என்றார். இதனை மோப்பம் பிடித்த சசிகலா கூட்டம் கடைசி வரை அப்படி ஒரு சம்பவம் நிகழக்கூடாது என்று கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொண்டார்கள். ஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டு முறை அம்மா நின்ற போது மாற்று வேட்பாளர் நான்தான். புரட்சித்தலைவி அம்மாவின் பரிபூரண நல்லாசி என்னைத் தவிர யாருக்கும் கிடைக்கவில்லை.
கே:- டி.டி.வி. தினகரனைப் பற்றி தங்களின் கருத்து?
ப:- முதன் முதலில் அம்மாவின் பெயருக்கும் புகழுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியவர் தான் இந்த தினகரன். அம்மாவால் போயஸ் தோட்டத்தில் இருந்து விரட்டப்பட்டவர் தான் இந்த டி.டி.வி தினகரன். அம்மா இருக்கும் வரை போயஸ் தோட்டம் பக்கமே எட்டி பார்க்காத இந்த தினகரனைத்தான் சசிகலா காலையிலே கழக உறுப்பினராக்கிறார். மாலையில் கழக துணைப் பொதுச் செயலாளர் ஆக்குகிறார். இன்றைக்கு இடைத்தேர்தலிலே வாக்குச் சாவடிகளை கைப்பற்றி கள்ள ஓட்டுகள் போட்டு சட்ட மன்ற உறுப்பினராகலாம் அதன் மூலம் தமிழக முதலமைச்சராக திட்டம் போட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
கே:- தாங்கள் வெற்றிப் பெற்று வந்தவுடன் தொகுதி மக்களுக்கு ஆற்றக்கூடிய முதல் பணி என்னவாக இருக்கும்?
ப:- அம்மா ஆற்றியிருக்கின்ற திட்டங்களே எங்களின் வெற்றிக்கு முதல் காரணமாகும். நாளை . ஓ.பி.எஸ். தலைமையில் ஒன்றுப்பட்ட அ.தி.மு.க ஆட்சி நிச்சயம் அம்மா அவர்களின் நல்லாசியுடன் அமையும்.இப்போது மேலோங்கியுள்ள முதல் பிரச்சினை குடிநீர் பஞ்சம் அதனை அறவே போக்க பாடுபடுவேன். சுத்தமான குடிநீர் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை மேற் கொள்வேன். தங்குவதற்கு வீடின்றி, தவிப் போர்க்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புக்களைப் பெற்று தந்து குடிய மர்த்துவேன். பல ஆண்டு காலம் பட்டா கிடைக்க பெறாதவர்களுக்கு பட்டா பெற்று தருவேன்.1991 முதல் 1996 வரை நான் இந்த தொகுதிக்கு செய்திருக்கின்ற திட்டங்களை இந்த காலக் கட்டத்தில் செய்ய வேண்டும் என்று சொன்னால், பல ஆயிரம் கோடிகள் ஆகும். இதனை மக்கள் நன்கு அறிந்திருக்கின்றார்கள். 21 ஆண்டு காலத்திற்கு பின்பும் என்மீது நன்றியுணர்வு கொண்டு நான் ஆற்றிய பணிகள் குறித்து சொல்லி, வாக்காள பெருமக்கள் என்னை திக்குமுக்காட வைக்கிறார்கள். அம்மா சொன்னதை போல் மக்களால் நான், மக்களுக் காகவே நான் என்று களப் பணியாற்றுவேன் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.