முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரணி நகர காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம்: டிஎஸ்பி ஜெரினாபேகம் தலைமை நடைபெற்றது

புதன்கிழமை, 7 ஜூன் 2017      வேலூர்
Image Unavailable

 

ஆரணி நகர காவல் நிலையத்தில் தனியார் மற்றும் அரசுப்பள்ளிகளின் தாளாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்

ஆரணி நகர காவல் நிலையத்தில் தனியார் பள்ளிகள் மற்றும் அரசுப்பள்ளிகளின் தாளாளர்கள், தலைமையாசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் ஆரணி டிஎஸ்பி ஜெரினாபேகம் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் பள்ளியில் மாணவர்கள் சாதி சம்பந்தப்பட்ட உடைகள் அணியாமல் இருக்கவும், சாதி சம்பந்தமான பேட்ச் அணியாமல் இருக்கவும், மாணவர்களின் கழுத்தில் சாதி சம்பந்தமான செயின்கள் அணியாமல் இருக்க வேண்டும், சைக்கிளில் ஸ்டிக்கர் ஒட்டுவது, கையில் பிரெஸ்லெட் அணிவதை தவிர்க்கவும், பள்ளியில் சாதிகள் குறித்தும், கட்சிகள் குறித்தும் பேசாமல் இருக்கவும் செய்ய வேண்டும். மேலும் இதனை பள்ளி தலைமையாசிரியர்கள், தனியார் பள்ளி, கல்லூரி தாளாளர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும் தங்கள் பள்ளி்ககு அருகில் குற்றச்செயல் உள்ளிட்ட செயல் நடைபெற்றால் காவல் நிலையத்தில் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும் என்று ஆரணி டிஎஸ்பி பேசினார். இதில் உடன் ஆரணி இன்ஸ்பெக்டர் சாலமன்ராஜா இருந்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து