முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தையின்மை சிகிச்சை முகாம்: நூற்றுகணக்கானவர்கள் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 11 ஜூன் 2017      வேலூர்
Image Unavailable

 

அரக்கோணம் நகரில் குழந்தையின்மை சிகிச்சை தொடர்பாக நடைபெற்ற இலவச ஆலோசனை முகாமில் நூற்றுகணக்கானவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். இது குறித்து விவரம் வருமாறு வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரம், சுவால் பேட்டையில் பழனி பார்வதி திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தி;ல் குழந்தையின்மை மற்றும் கர்ப்பபை சிகிச்சை தொடர்பாக இலவச ஆலோசனை முகாம் நேற்று நடைபெற்றது.

ஆலோசனை முகாம்

சென்னை, பழநி பாலாஜி கருத்தரித்தல் மையம் மற்றும் அரக்கோணம் சந்திப்பு அரிமா சங்கம் இணைந்து முகாம் ஏற்பாடுகள் செய்யபட்டது. முகாம் துவக்க விழாவிற்கு அரிமா சங்க முன்னாள் தலைவர் டிகேபி.செல்வம் தலைமை தாங்கினார். முகாம் ஒருங்கிணைப்பாளர் கே.ஆறுமுகம் வரவேற்று பேசினார். அரிமா சங்க மாவட்ட செய்தி தொடர்பாளர் அருண்குமார், அரிமா சங்க பொருளாளர் நமச்சிவாயம், ஆகிய இருவர் முகாமிற்கு முன்னிலை வகித்தனர்.

மாவட்ட ஆளுநரின் ஆலோசகர் முருகேசன் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பழநி பாலாஜி கருத்தரித்தல் மையத்தின் தலைமை மருத்துவர் டி.செந்தாமரைச் செல்வி முகாமில் பங்கேற்று பேசியதுடன். ந}ற்றுகணக்கான தம்பதியர்களுக்கு சிகிச்சை அளித்தார். முன்னதாக ஒவ்வொரு தம்பதியரிடமும் ஸ்கேன், விந்து, மற்றும் ரத்த பரிசோதனைகள் செய்யபட்டது. இறுதியில் மருத்துவ குழு மேலாளர் ஆறுமுகம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து