முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்சி நிர்வாகிகள் 5 பேர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி ஆழ்ந்த இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 13 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : சேலம், விழுப்புரம், திருப்பூர், சிவகங்கை மாவட்டங்களில் கழக நிர்வாகிகள் 5 பேர் உடல்நலக் குறைவு, விபத்து உள்ளிட்ட காரணங்களால், உயிரிழந்தது குறித்து முதலமைச்சரும், கழக தலைமை நிலைய செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , விழுப்புரம் தெற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்.மன்ற ஒன்றியத் தலைவர் திரு.தமிழரசன், சிவகங்கை நாட்டரசன் கோட்டை பேரூராட்சி, 11-வது வார்டு கழக செயலாளர்  கருப்பையா, திருப்பூர் புறநகர் மாவட்ட கொழுமம் கிளைக்கழக செயலாளர் என்.ராகவன், பெதப்பம்பட்டி கிளைக் கழக முன்னாள் செயலாளர்  கேசவன் ஆகியோர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது குறித்தும், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த கிளைக்கழக செயலாளர்  பி.துரைசாமி, சாலை விபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.

அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் முதலமைச்சர் தெரிவித்துக் கொண்டுள்ளார். சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜாவின் தாயார் எஸ்.அலமேலு உயிரிழந்தது குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து