முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை அருகே பண்டிதப்பட்டில் நீர்மேலாண்மை விழிப்புணர்வு பேரணி

வியாழக்கிழமை, 15 ஜூன் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு கிராமத்தில் நபார்டு வங்கி மற்றும் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட நீர்மேலாண்மை விழிப்புணர்வு பிரசசார பேரணி மற்றும் கிராம பெண்கள் பங்கேற்ற செயல்விளக்க முகாம் நடைபெற்றது.

விழிப்புணர்வு  பேரணி

முகாமுக்கு அறக்கட்ளை நிர்வாக இயக்குநர் சசிகலா தலைமை தாங்கினார். நநிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் ஸ்ரீராம், தாட்கோ வங்கி மேலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கசிவுநீர் குட்டை அமைத்தல், ஆழ்துளை கிணறுகளில் நீர்செரிவூட்டல் குறித்து செயல்விளக்கம் அளித்தனர். இதில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எம்.அய்யனார், பண்டிதப்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என்.அய்யனார் உள்பட 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து