முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2021 ஆம் ஆண்டிலும் அ.தி.மு.க ஆட்சியே நீடிக்கும் : சட்டசபையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி

வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, நான்கு ஆண்டுகள் மட்டுமல்ல,  2021 ஆம் ஆண்டும் அதிமுக ஆட்சியே நீடிக்கும் என்று சட்டசபையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார், கூட்டுறவுத்துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலளித்து சட்டசபையில் கூட்டுறவு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசினார், அப்போது அவர் பேசியதாவது:

முல்லைக்கு தேர் கொடுத்த பாரியை அறியாத மன்னன், புரியாத மன்னன் என்று கேலி கிண்டல் செய்தோர் உண்டுகுளிரில் நடுங்கி தோகை விரித்தாடிய மயிலுக்கு போர்வை போத்திய - பேகனையும் அறியாத மன்னன், புரியாதமன்னன் என்று கேலி கிண்டல் செய்தோர் உண்டு வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றவள்ளலாரையும் கேலி கிண்டல் செய்தோர் உண்டு நோக்கங்களும் எண்ணங்களும் உயர்வாக இருக்கும்போது உயர்ந்த உள்ளம் கொண்டோருக்கு எதுவுமே குறையாக தெரியாது எங்களிடம் வெகுளித்தனம் இருக்கும்வெள்ளந்தி சனங்களாக இருப்போம் ஆனால் எங்கள் நோக்கங்கள் எல்லாம் நல்ல எண்ணங்களாக மட்டுமேநிறைந்திருக்கும் எம்.ஜி.ஆரின் தியாகத்தால் மலர்ந்த இயக்கம் மாசற்ற அம்மாவின் மகத்தான தொண்டுகளால் வளர்ந்த இயக்கம் இன்னாட்டு அரசியலையேதென்னாட்டு பக்கமாக திருப்பிக் காட்டிய வலிமை கொண்ட பேரியக்கம் அம்மாவின் மறைவிற்குப் பிறகு கழகம்ஆட்டம் கண்டுவிடும் - என கணக்கப் போட்டவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து சீரிளமை இயக்கத்தின் மிடுக்கில்சிறிதளவும் குறைவின்றி செய்து முடிக்கும் சாதனைகளின் கம்பீர எண்ணிக்கையில் கடுகளவும் பிழையின்றி என்தாயின் வழியில் இயக்கம் தலை நிமிர்ந்து நடக்கிறது எதற்காகவும் யாரிடத்திலும் என் மக்கள் கையேந்திநிற்காத காலத்தை உருவாக்குவேன் என்னும் இலட்சியத்தை முன்னெடுத்துப் போன எங்கள் சத்தியத் தாயின்கனவுகளை நனவாக்கிட எங்கள் குருதியில் உறுதி கொண்டு என்னாளும் உழைப்போம் ஒன்றரை கோடிதொண்டர்களும் ஒரு வயிற்றில் உதித்திட்ட உறவுகளாய் ஒன்றிணைந்து அரண் அமைப்போம் கழகத்தை இமையாகநின்று காப்போம் ஈகைக்கும் வாகைக்கும் இலக்கணம் படைப்போம்.

இந்த ஆட்சி, அம்மா மீது, மக்கள் 100 சதவிகிதம் நம்பிக்கை வைத்து அமைந்த ஆட்சி,. அப்படிப் பட்ட இந்த ஆட்சியில், எம்.ஜி.ஆரின் நுhற்றாண்டுபிறந்தநாளை சிறப்போடும், உவகையோடும் கொண்டாடுவதில் அம்மாவின் அருமைப்பிள்ளைகளான, செல்லப் பிள்ளைகளான நாங்கள், பெருமையடைகிறோம்.தாய் வழி வந்த, தங்கங்கள் எல்லாம் ! ஓர் வழி நின்று, நேர்வழி சென்றால் !நாளை நமதே, தமிழ் நாடும் நமதே ! இந்த நான்கு ஆண்டுகள் மட்டும் அல்லஅடுத்து 2021 ல் அமையும் ஆட்சியும் நமதே.

இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து