எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் அரக்கோணம் நகராட்சி டி.என்.எச்.பி. காலணியில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டேக்வாண்டோ உள் விளையாட்டு அரங்க கட்டிடத்தை பள்ளி கல்வி,; விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி விழா சிறப்புiயாற்றினார்கள்.இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சி.அ.ராமன். தலைமை தாங்கினார்.இந்த விழாவிற்கு சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் என்.ஜி.பார்த்தீபன், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி அவர்களும் முன்னிலை வகித்தனர்.
ஊக்கத்தொகை
பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விழாவில் பேசியதாவது. மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இந்த டேக்வோண்டோ உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மறைந்த முதலவர் அம்மா இந்தியாவிலேயே தமிழகம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கவேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களையும், இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டும் வகையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கணைகளுக்கு நிதியுதவிகளை வழங்கி அவர்களுக்கு ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தி தந்துள்ளார்கள். மறைந்த முதல்வர் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில்தான் விளையாட்டுத்துறைக்கு என்று தனியாக ஒரு பல்கலைகழகத்தை உருவாக்கி விளையாட்டு துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு விளையாட்டுத்துறையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் ரூ.4.80 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகையினை வழங்கியுள்ளது. மேலும் மறைந்த முதல்வர் அம்மா சர்வதேச அளவிலான நேரு விளையாட்டரங்கினை அமைத்து தமிழகத்திற்கு பெருமையை சேர்த்தார்கள்.
வேலூர் மாவட்டம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குகிறது. இந்த மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் தேசிய அளவில் வெற்றி பெற்று சாதனையை படைத்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் விளையாட்டு துறையை மேலும் மேம்படுத்தும் விதத்தில் ரூ5.0 கோடி மதிப்பீட்டில் மிகப்பெரிய விளையாட்டரங்கமும், ரூ.1.0 கோடி மதிப்பில் அரக்கோணத்தில் ஒரு விளையாட்டரங்கமும் விரைவில் கட்டப்படும். இந்த விளையாட்டரங்கம் தமிழக அரசின் தன்னிறைவு திட்டத்தில் ரூ.70 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் ரூ24 இலட்சம் தனியார் பங்களிப்பும் உள்ளது அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் வேலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி மாவட்டம் மூன்று கல்வி மாவட்டமாக உருவாக்கப்படும் இதனால் மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு திறன் மேம்படும் இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. வீரர் வீராங்கனைகளுக்கு விளையாட்டு போட்டியில் வெற்றியும் தோல்வியும் சகஐமான ஒன்று. தோல்வி என்பது வெற்றிக்கான படிகட்டுகள் மேலும் இளைஞர்கள் முயன்றால் முடியாதது ஏதுமில்லை. மூச்சு நின்றால்தான் மரணம் அல்ல முயற்சி செய்யவில்லை என்றாலும் அது வெற்றி கிடைப்பதில் ஏற்படும் மரணம் ஆகும். ஆகவே மாணவர்களும் இளைஞர்களும் தொடர்ந்து முயற்சி செய்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். இந்த அரக்கோணம் டோக்வோண்டோ விளையாட்டு மூலம் இப்பகுதியல் உள்ள பல இளைஞர்கள் பயனடைந்துள்ளனர் எதிர் வரும் காலங்களிலும் இந்த விளையாட்டை மாணவர்கள் சிறந்;;த முறையில் கற்று வெற்றி பெற்று தமிழகத்திற்கும் இந்தயாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்று வாழ்த்தி விழாவில் பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
இவ்விழாவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் வேலூர் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு பதவியேற்று 100 நாட்களில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்ட உதவிகள் அடங்கிய 100 நாள் சாதனை கையேட்டினை பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களும், வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களும் வெளியிட்டார்கள். மேலும் வருவாய் துறையின் மூலம் 120 இருளர் இனத்தை சார்ந்தவர்களுக்கு இருளர் இன சான்றிதழ்களையும், 44 பயனாளிகளுக்கு ரூ.5.இலட்சத்து 10ஆயிரம் மதிப்பிலான முதியோர் உதவி, திருமண நிதியுதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் விபத்து நிவாரண நிதியுதவித்தொகையினையும் அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எ.ஜி.விஜயன், அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், வேக்வாண்டோ சங்கத் தலைவர் மரு.சி.எஸ்.சந்திரமௌலி, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் துரைகுப்புசாமி, செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை கே.ராமமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஜி.கமலகுமாரி, நகராட்சி பொறியாளர் எம்.சண்முகம், அரக்கோணம் வட்டாட்சியர் பாஸ்கரன், அல்ட்ராடெக் நிர்வாக அலுவலர் ஜி.உதயகுமார், கிளைத் தலைவர் பிரசாந்த்ரஸ்தோகி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.