எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நோய். சுவாசக் குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும். ஆஸ்துமா உள்ள நபர்களின் சுவாசக்குழாய்களின் உட்சுவர் வீக்கம் கண்டிருக்கும். இப்படிப்பட்ட வீக்கம் கண்ட சுவாசக்குழாயில் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ அல்லது மூச்சுக் குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ உதாரணமாக புகை, தூசி போன்றவை செல்லும் போது சுவாசக்குழாய்கள் இப்படிப்பட்ட பொருட்களுக்கு எதிராக செயல்படும்.
இப்படி சுவாசக்குழாய்கள் எதிரிடையாக செயல்படும் போது சுவாசக் குழாய்களின் உள் சுற்றளவு குறைந்து, சாதாரண அளவைவிட மிக குறைந்தளவு காற்றே நுரையீரலின் காற்றுப் பரிமாணம் நடக்கும் இடத்திற்கு செல்கிறது. சுவாசக் குழாய்கள் சுருங்குவதால், அதன் வழியாக காற்றுச் சென்று வரும்போது அதிகமாக சத்தம் கேட்கிறது. மேலும், நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது.
இதன் விளைவாக மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை, இருமல், மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை உண்டாக்கு கிறது. இவை அனைத்தும் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிக மாகக் காணப்படும்.
ஆஸ்துமா வியாதியை குணப்படுத்த முடியாது. ஆனால் ஆஸ்துமா நோய் கண்டவர்கள் பலர் இந்த நோயினை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். எனினும், ஒரு சில நேரங்களில் நோயின் தாக்கம் இருக்கும். அப்போது உரிய மருத்துவம் செய்து கொண்டு மற்றவர்களை போல சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்கின்றனர்.
ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும் போது சுவாசக் குழாய்களில் மிக அதிகமான அடைப்பு ஏற்பட்டு, உடலில் முக்கிய உறுப்புகளுக்கு போதிய பிராணவாயு கிடைப்பதில்லை. (உம். மூளை, ஈரல், சிறுநீரகங்கள்). இது போன்ற சந்தர்ப்பத்தில் அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலை ஏற்படுகிறது. ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருப்பின் உயிர் இழப்பும் நேரிடுகிறது.
எனவே ஒருவர் ஆஸ்துமா வியாதியினால் பாதிக்கப்பட்டால், அந்த நபர் மருத்துவரை சந்தித்து, முறைப்படி மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும். எதனால் ஆஸ்துமா வருகிறது, அதனை எப்படி தவிர்க்கலாம் என்பத னையும், அறிந்து கொள்ள வேண்டும். மருத்துவரும் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள, உட்கொள்ள வேண்டிய மருந்துகளை பரிந்துரைப்பார்.
நோயின் காரணங்கள் : நாம் சுவாசிக்கும் காற்று உட்பட சுற்றுச்சூழலில் காணப்படுகிறது. சில பொருட்கள், ஆஸ்துமா வியாதிக்கான அறிகுறிகள் மற்றும் பாதிப்புகளை கொண்டு வருகிறது. ஆஸ்துமா வருவதற்கான சில பொதுவான காரணங்களில் உடற்பயிற்சி, அலர்ஜின்ஸ் எனப்படும் ஒவ்வா பொருட்கள், எரிச்சலூட்டும் பொருட்கள் மற்றும் வைரஸ் நோய் தோற்று போன்றவையும் அடங்கும். சிலருக்கு உடற்பயிற்சி செய்யும் போதும் அல்லது வைரஸ் கிருமிகளால் தாக்கப்படும் போதும் மட்டும் ஆஸ்துமா வியாதி காணப்படுகிறது.
நோய்க்கான காரணங்கள் : ஈழை நோய்க்கான அடிப்படைக் காரணங்கள் மிகச் சரியாக இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாததாக உள்ளது. சூழல் காரணிகளுடன் மரபியல் காரணிகளும் இணைந்தே இந்த ஈழை நோயை ஏற்படுத்துகிறது. இந்தக் காரணிகள் நோயின் தீவிரத் தன்மையையும் சிகிச்சைக்கான பலனையும் மாற்றுகின்றது. சில சூழல், மரபியல் காரணிகள் ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பினும் வேறு பல காரணிகள் இன்னமும் உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே உள்ளன.
மிகவும் இலகுவாக தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய நுரையீரலுக்கு ஆபத்து வரக்கூடும் என்ற நிலையில் நுரையீரலுக்குச் செல்லும் காற்று வழியானது தற்காப்பு நோக்கில் சுருங்கி மூடிக் கொள்ளப் பார்ப்பதாகக் கருதப்படுகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரியல் வேதியியல் மூலக்கூற்று உயிரியல் பிரிவிலிருந்த புரொஃப்பெட் (Pசழகநவ) என்பவர் மனித உடலின் நோய் எதிர்ப்புத் தொகுதியானது ஒவ்வாமை ஊக்கிகளை (யடடநசபநளெ) தமக்கான அச்சுறுத்தலாகவே கருதுவதாகக் கூறினார்.
இதனால் ஈழை நோயானது கூர்ப்பின் வழி தோன்றிய உடலின் ஒரு தற்காப்பு இயங்கு முறையாகக் கொள்ளப்படலாம். இதன் வழி சுவாச வழிக்கான மாசுபடுத்திகள் அகற்றப்படும்போது அல்லது குறைக்கப்படும் போது இந்நோயினால் ஏற்படும் பிரச்சனைகளும் குறையும் என்று கூறப்படுகின்றது.
சூழலியல் காரணிகள் நோய்க்கான பொதுவான காரணங்கள் :
1. ஒவ்வாமை ஊக்கிகள் (யடடநசபநளெ) - தூசு, சிற்றுண்ணிகள், மகரந்தம், பூஞ்சை
2. புகைஇலையிலிருந்து வரும் புகை, குறிப்பாக, பெண்கள் கருத்தரித்து இருக்கும்போது சிகரெட் புகைத்தலுடன் இந்நோய் தொடர்புடையதாக இருப்பதாகக் கருதப்படுகிறது.
3. வேலைத் தளங்களில் பயன்படும் வேதிப்பொருட்கள்
4. மாசடைந்த காற்று, வாகனங்களினால் ஏற்படும் தூய்மைக்கேடு அல்லது அதிகமான ஓசோன் அளவுகள் ஆகியவற்றின் காரணத்தினால் காற்றின் தரம் குறைகிறது. காற்றின் தரம் குறைதல் இந்நோய் உருவாதலுடனும், இந்நோயின் பாதிப்பு அதிகமாவதுடனும் தொடர்புடையதாக உள்ளது என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் இதை உறுதிப்படுத்துவதற்கு இன்னும் அதிகமான ஆராய்ச்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. காற்று மாசுப்படுத்திகளின் வெளியாக்கத்திற்கும்(எ.கா) வாகனங்களினால் ஏற்படும் தூய்மைக்கேடு) குழந்தைப் பருவத்தில் ஏற்படும் ஈழை நோய்க்கும் இடையே தொடர்பு இருக்கிறது என்று சமீபத்தில் வந்த ஆய்வுகள் கூறுகின்றன. ஈழை நோய் ஏற்படுதல் மற்றும் குழந்தைப்பருவ ஈழைநோய் அதிகரித்தல் ஆகிய இரண்டுமே வெளியே உள்ள காற்று மாசுப்படுத்தி களினால் தான் ஏற்படுகிறது என்று இந்த ஆராய்ச்சி கண்டுபிடித்துள்ளது.
மேலும் இந்நோயைத் தீவிரப்படுத்தக் கூடிய ஏனைய காரணிகளாவன.
ஆஸ்துமா தீர்க்கும் முள்ளங்கி : நாம் உண்ணும் உணவே சில சமயம் மருந்தாக செயல்படுகிறது. காய் வகைகளில் ஒன்றான முள்ளங்கியில் பல்வேறு, பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. கோடை காலத்தில் உடலுக்கு உஷ்ணம் அதிகம், அதிகம் ஏற்படாமல் பாதுகாப்பதில் முள்ளங்கிக்கு முக்கிய பங்குண்டு. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட முள்ளங்கியில் உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களும் தாது உப்புக்களும் உள்ளன. முள்ளங்கியில் சிவப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது. சிவப்பு முள்ளங்கி சுவைக்கு மட்டுமே ஏற்றது. பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும். இட்லி வேக வைப்பது போல முள்ளங்கிப் பிஞ்சை ஆவியில் வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.
முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும். தசிறுநீர் பிரச்சினை தீரும்.
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி. சிறுநீர்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது. சிறுநீர்ப் பாதையில் பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்க லாம். முள்ளங்கி கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.
முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றில் பொருமல், எரிச்சல் போன்ற பிரச்சினைகள் வரும். எனவே அளவாக சாப்பிடுவது நல்லது.
உணவு கட்டுப்பாடு மற்றும் சேர்க்கைகள் : குறைந்த அளவு வைட்டமின் சி நுரையீரல் செயலிழப்போடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளது மற்றும் வைட்டமின் சி உட்கொள்வதை அதிகரிப்பத னால் ஆஸ்துமா நோயுடைய மக்களின் நுரையீரல் செயல்பாடு அதிகரிக் கிறது. இது உடற்பயிற்சி மூலம் ஏற்படும் ஆஸ்துமாவை தடுக்க உதவு கின்றது என்று பல ஆய்வுகள் கூறுகின்றது. டெக்லென்பர்க் நடத்திய ஆராய்ச்சியில் ஒரு நாளைக்கு 1500 மில்லி கிராம் அஸ்கோர்பிக் அமிலம் எனும் அடிப்படையில் 2 வாரங்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை பொதுவான (-14.3+1.6மூ) மற்றும் பிளாசிபோ உணவு கட்டுப்பாடோடு (-12.9+2.4மூ) ஒப்பிடும் போது உடற்பயிற்சிக்கு பின்னான கநஎ1(-6.4+2.4மூ) அதிகப்படியாகக் குறைக்க உதவுகின்றது என ஆராய்ச்சியின் முடிவு காண்பிக்கின்றது.
பிளாசிபோ மற்றும் பொதுவான உணவு கட்டுப்பாடு ஒப்பிடும் போது அஸ்கோர்பிக் அமில உணவு கட்டுப்பாடு, ஆஸ்துமா அறிகுறிகளை குறிப்பிடத்தக்க வகையில் சீர் செய்கிறது உடற்பயிற்சிக்கு பின்னான குநுNழுஇ டுவுஊ4-நு4 மற்றும் 9யஇ 11டீ-Pபுகு2 அளவுகள் பிளாசிபோ மற்றும் பொதுவான உணவு கட்டுப்பாட்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைவாக (pஈ0.05) இருந்தது. முடிவுகள் சாதகமாக இருந்த போதும் ஆஸ்துமா தாக்கத்தின் வீரியத்தை வைட்டமின் சி மட்டும் குறைக்கும் என்று கூறிவிட முடியாது. ஆஸ்துமா உள்ள மக்களுக்கு வைட்டமின் சி பரிந்துரைக்கப்படுவதற்கு முன் பெரிய மற்றும் வலுவான ஆய்வுகள் தேவைப்படுகின்றது.
ஆஸ்துமா சிகிச்சையில் மெக்னீசியம் மற்றும் செலினியம் சேர்க்கை களில் பங்கு பற்றி அறிய மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. மிகத் தீவிரமான ஆஸ்துமா நோயாளிகளில் மரபு சார்ந்த சிகிச்சையோடு கூட கூடுதலாக மெக்னீசியம் சல்ஃபேட் நரம்பு வழி சிகிச்சை அளிக்கப்படும் போது மூச்சுக் குழாய் தளர்ச்சி அடையும் தாக்கம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிகிச்சை : அறிகுறிகளை சமாளிக்கவும் வருமுன் கண்காணிக்கவும் அதற்கேற்ற குறிப்பிட்ட திட்டங்களை வகுக்கும் வகையில் மருத்துவர் மற்றும் நோயாளி (குழந்தை அல்லது வயது வந்தவராக இருந்தாலும்0 ஆகியோரி டையே உறவு முறையை உருவாக்குவது ஆஸ்துமாவை கட்டுப்படுத்து வதில் உள்ள மிக முக்கியமான படியாகும். எதை அடைய வேண்டும் என்பதை ஆஸ்துமா உள்ள ஒரு நபர் புரிந்து கொண்டுள்ளார். (மற்றும் முடிவெடுப்பதில் சரியான பங்கு எடுக்கிறார்) என்பதை உறுதி செய்து கொள்வது அவசியமாகும். அடைய வேண்டியவற்றில் ஒவ்வாமை உருவாக்கும் பொருட்களுக்கு வெளிப்படுவதை குறைத்தல் அறிகுறிகளின் தீவிரத்தை அறிந்து கொள்ள மருத்துவ சோதனைகளைச் செய்து கொள்வது மற்றும் மருந்துகள் எடுத்துக் கொள்வதும் கூட உள்ளடங்கும். சிகிச்சை திட்டம் எழுதப்பட்டும் ஒவ்வொரு வருகையின் போதும் ஆலோசனை செய்யப்பட்டு மற்றும் அறிகுறிகளைப் பொறுத்து மாற்றப்பட வேண்டும்.
செல்ல பிராணிகள் அல்லது ஆஸ்பிரின் போன்ற தூண்டும் பொருட்களைக் கண்டறிந்து அவற்றுக்கு வெளிப்படுதலை குறைத்தல் அல்லது தவிர்த்தல் ஆகியவை ஆஸ்துமாவிற்கு அளிக்கக்கூடிய மிகவும் சக்தி வாய்ந்த சிகிச்சையாகும். தூண்டுதலை தவிர்த்தல் போதுமான அளவிற்கு இல்லாமல் இருந்ததானால், மருத்துவ சிகிச்சையை நாடலாம். உணர்ச்சி நீக்கம் குணமாக்கக் கூடியதாக இருக்கலாம் என பரிந்துரைக்கப்படுகிறது. கூடுதலாக சில நோயாளிகள் புடேகோ முறையின் மூலம் தங்கள் சுவாச பழக்கங்களை மாற்றி அமைத்து தங்களது அறிகுறிகளைப் போக்கியுள்ளனர்.
நிவாரண மருந்து, அதிக நேரம் செயல்படக் கூடிய டீ2- இயக்கிகள் மற்றும் அவசர சிகிச்சை உள்ளிட்டவை மற்ற சிகிச்சை முறைகளாகும்.
தொகுப்பு: டாக்டர் ஆர்.பாலாஜி, தொடர்புக்கு : செல் : 94871 61797. விக்னேஷ் மருத்துவமனை,
220ஃ135. 2-வது அக்ரஹாரம், சேலம் - 636001.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
3-ம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு 3 மாதங்களில் முடிக்கப்படும்: தமிழக அரசு
17 Apr 2024சென்னை : கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மூன்றாம் பாலினத்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகள் 3 மாதங்களில் முடிக்கப்படும் என தமிழ்நாடு அரசு ச
-
டி-20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற ஹர்திக் பாண்டியாவுக்கு பி.சி.சி.ஐ. திடீர் உத்தரவு
17 Apr 2024மும்பை : டி-20 உலகக் கோப்பை அணியில் இடம்பெற ஹர்திக் பாண்டியாவுக்கு பி.சி.சி.ஐ. கட்டளை போட்டுள்ளது.
சிக்கலாகவே...
-
பாரீஸ் ஒலிம்பிக் 2024: ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம் தொடங்கியது
17 Apr 2024பாரீஸ் : பாரீஸ் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, ஒலிம்பிக் ஓட்டம் தொடங்கியது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சீனாவில் விமர்சனத்திற்குள்ளான புதிய ரயில் நிலைய வடிவமைப்பு
18 Apr 2024பெய்ஜிங், சீனாவின் நான்ஜிங் வடக்கு ரயில் நிலையத்தில் புதிய வடிவமைப்பு தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
இஸ்ரேல் உடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட கூகுள் ஊழியர்கள் 28 பேர் பணி நீக்கம்
18 Apr 2024வாஷிங்டன், கூகுள் நிறுவனம் - இஸ்ரேல் இடையிலான கிளவுட் கம்ப்யூட்டிங் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை அந்நிறுவனம் நீக்கியுள்
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.