முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலெக்டர் மலர்விழி தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி

வெள்ளிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2017      சிவகங்கை
Image Unavailable

சிவகங்கை.சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.மலர்விழி, தலைமையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
நல்லிணக்க நாள் உறுதிமொழி
           நான் சாதி, இன வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சு வார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து