முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றும் பணி துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஆகஸ்ட் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா இல்லம்’ நினைவு இல்லமாக ஆக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை தொடர்ந்து இதற்கான பணிகள் நேற்று தொடங்கின.

வருவாய்த்துறை அதிகாரிகள் போயஸ் கார்டனுக்கு சென்று ஆய்வு நடத்தினர். கடந்த 17ம் தேதி அன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளிக்கையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த ‘வேதா இல்லத்தை’ நினைவு இல்லமாக ஆக்கி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்குமாறு தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. ஜெயலலிதாவின் சிறப்புகளையும், நாட்டிற்கு அவர் செய்த சாதனைகளையும், தியாகங்களையும் பொதுமக்கள் அறியும் வண்ணம் ஜெயலலிதா சிறப்பாக வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள ‘வேதா இல்லம்’ அரசு நினைவு இல்லமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக அனுமதிக்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பை தொடர்ந்து அரசு மிக மும்முரமாக பணிகளை தொடங்கியுள்ளது. அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் போயஸ் கார்டன் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. போலீசார் ஏராளமாக குவிக்கப்பட்டனர். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டின் அருகிலேயே போலீசார் நிறுத்தப்பட்டு பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. அந்த பகுதிக்கு வருபவர்களையும் அந்த பகுதியில்தான் வசிக்கிறார்களா? என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு அனுமதி வழங்கப்படுகிறது. ஜெயலலிதாவின் வீட்டிற்குள் நுழைய யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அங்கு பணியாற்றுபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், வேதா இல்லத்தை நினைவு இல்லம் ஆக்கும் பணி நேற்று தொடங்கியது. மயிலாப்பூர் தாசில்தார் சைலேந்திரன், அதிகாரிகளுடன் ஜெயலலிதாவின் வீட்டிற்கு வந்தார். அந்த பகுதி முழுவதையும் அந்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். வீட்டின் அமைப்பு, அளவுகள் போன்ற பல அம்சங்களை அதிகாரிகள் வெகு நேரம் ஆய்வு செய்தனர். இதுமட்டுமல்லாமல் வீட்டின் பகுதிகளை அளவெடுத்து குறித்துக்கொண்டனர். வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு முடிந்தபிறகு பொதுப்பணித்துறையினரும் வந்து ஆய்வு நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதா வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும்போது அவர் பயன்படுத்திய பொருட்கள், கார்கள், அவருக்கு கிடைத்த பரிசு பொருட்கள், புகைப்படங்கள், அவருடைய பெரிய நூலகம் போன்றவை காட்சிக்காக வைக்கப்படும். மேலும் அவருடைய பேச்சுகள் ஒலிபரப்பவும், அரசியலில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறையில் அவருடைய பங்களிப்புகள், பொதுமக்கள் அறியும் வகையில் காட்டப்படவும், என்னென்ன செய்யலாம் என்று அதிகாரிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் பங்கு மிக முக்கியமானதாக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து