எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் தக்கோலததில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மண்டல பயிற்சி மையம் அமைந்துள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற 1043 அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகளின் அணிவகுப்பை பார்வையிட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கி விழாவில் சிறப்புரையாற்றினார்.
சான்றிதழ்கள்
இவ்விழாவில் மத்திய தொழில் பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் ஓ.பி.சிங் வரவேற்புரையாற்றினார்.இந்த அணிவகுப்பில் 25 உதவி கமாண்டர்கள், 310 துணை ஆய்வாளர்கள் மற்றும் 708 உதவி துணை ஆய்வாளர்கள் கலந்துக் கொண்டனர். இப்பயிற்சி மையத்தில் பயிற்சியின் போது சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கும், வீரர்களுக்கும் உள்துறை அமைச்சர் பதக்கங்களை வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார். மேலும் பணியின் போது சிறப்பாக பணியாற்றிய மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு மேதகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களின் பதக்கங்களையும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொழிற் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு நிகழ்ச்சியில் பேசியதாவது: மத்திய தொழில் பாதுகாப்பு படை நம்முடைய இந்திய நாட்டில் கடந்த 48 வருடங்களாக பல மைல் கற்களை கடந்து வந்துள்ளது. இந்திய நாட்டின் வளர்ச்சியிலும் பாதுகாப்பிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை மிக முக்கிய பங்கு எடுத்துள்ளது.
இன்றைய காலத்தில் இவர்களுடைய பணி மிகவும் சவாலானது. இருப்பினும் இப்படை பிரிவு வீரர்கள் தங்களது பணியினை இந்திய நாட்டிற்காக மகிழ்ச்சியுடன் செய்து வருகின்றனர். இதுநாள் வரை இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கும் அரசு அலுவலகங்களுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கி வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை தனியார் நிறுவனங்களுக்கு தற்போது பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடாகும். 2030 ஆம் ஆண்டிற்குள் இந்திய நாட்டின் பொருளாதாரம் 2 டிரில்லியன் டாலர் மதிப்பில் இருந்து 5 டிரில்லியன் டாலர் மதிப்பாக உயரும். இந்தியா தற்போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீவிர வாத அச்சுறுத்தல்களை அதிக அளவில் சந்தித்து வருகிறது. அதை இந்திய முறியடித்து வருகிறது. தற்போது தீவிரவாத தாக்குதல் விஞ்ஞான ரீதியில் உள்ளது. அதனையும் முறியடிக்கும் வகையில் இந்தியாவின் பலம் அதிகரித்துள்ளது.
புதிய தொழில் நுட்பம்
உலக அளவில் ஒரு துணை ராணுவமாக மத்திய தொழிற்பாதுகாப்பு படை விளங்கி வருகிறது. தற்போது இணைய தீவிரவாதம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இணைய தீவிரவாதம் என்பது ஒரு நாட்டின் இணைய தேவைகளை முடக்கி அதன்மூலம் அந்நாட்டின் நிர்வாகத்தை நிலை குலைய செய்வதாகும். இந்த இணையதள தீவரவாதத்தை எதிர்கொள்ளும் வகையில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை புதிய தொழில் நுட்பங்களை பற்றி அறிந்துக்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். நம்முடைய நாட்டில் காவல் துறை பணியில் தற்போது 5 சதவிகித பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இதற்காக மத்திய அரசு காவல் துறை பணிகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கிட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை காவல் துறைத் தலைவர் (பயிற்சி) ஜக்பீர் சிங், கமாண்டர் கார்த்திகேயன், பாராளுமன்ற உறுப்பினர்கள் இல.கணேசன், கோ.அரி, சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி, காவல் கண்காணிப்பாளர் பகலவன், மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கலந்துக் கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.