முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிராம வளம் மற்றும் தூய்மை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா கம்மாளம்பூண்டி கிராமத்தில் தூய்மை பாரத இயக்கத்திட்டத்தின் சார்பில் கிராம வளம் மற்றும் தூய்மை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணி, ராஜ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனை மருத்துவர் ரங்காஷினி சித்த மருத்துவர் இலங்கோவன், செவிலியர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூய்மை பாரத இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கிராம வளங்கள் பாதுகாப்பது, மரங்கள் வளர்ப்பதன் அவசியம், தண்ணீர் வீனாவதையும், மழை நீர் தேங்காமல் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை பற்றி விளக்கி கூறப்பட்டது. மேலும் கிராமத்தில் உள்ள மேல் நிலை நீர் தேக்கத் தொட்டியினை தூய்மை செய்தல், குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்தல், பள்ளி மற்றும் ஊராட்சியில் உள்ள பொது கட்டிடங்கள் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தது. பின்னர் கம்மாளம்பூண்டி அரசினர் மேல் நிலைப்பள்ளியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமில் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள், .டி.எஸ் டெங்கு கொசு உருவாவதை தடுக்க செய்ய வேண்டியவைகள், டெங்கு பரவாமல் தடுத்திடும் வழிமுறைகள் குறித்து பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிறப்பு மருத்துவ முகாமில் மாணவ-மாணவியர்கள் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மாணவ-மாணவியர்கள், ஆசிரியர்கள், அரசு பொது மருத்துவமனை ஊழியர்கள் இணைந்து டெங்கு தடுப்பு குறித்த உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ-மாணவியர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து