முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செய்யாறில் கூட்டுறவு வரா விழா இலவச மருத்துவ முகாம்: தூசி மோகன் எம்எல்ஏ துவக்கிவைத்தார்

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரத்திலுள்ள செய்யாறு கூட்டுறவு தொடக்க வேளாண்மை (ம) ஊரக வளர்ச்சி வங்கியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு செய்யாறு சரக துணைப்பதிவாளர் ஏ.சரவணன் தலைமை தாங்கினார். வங்கியின் செயலாளர் எம்.இளங்கோவன் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி.கே.மோகன் முகாமினை துவக்கி வைத்தார்.

முகாமில் நிலவள வங்கி தலைவர் ப்பி.லோகநாதன், திருவத்திபுரம் கூட்டுறவு வங்கியின் தலைவர் ஜெ.ஜெயலட்சுமி, திருவத்திபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கிருஷ்ணன், செய்யாறு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் எ.அருணகிரி, செய்யாறு கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் மகேந்திரன், மருத்துவர்கள் பழனி, பரியதர்ஷினி, சத்யா, கூட்டுறவு சார்பதிவாளர்கள் கே.அன்புகரசு, ஜி.சேகர், பெ.மணி, என்.எட்டியப்பன், சு.பழனி, எம்.பாண்டியன், மூர்த்தி, ஏஞ்சல்ஸ், சத்தியமூர்த்தி, செயலாளர்கள் எத்திராஜ், பூபதி, பிரகாசம், நெடுஞ்செழியன், வெங்கடேசன், கஸ்தூரி, சீனுவாசன், மாலதி, மோகனசுந்தரம், நிலவள வங்கி பணியாளர்கள் ப்பி.பத்மா, எஸ்.மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து