முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆரணியில் நீதிபதிகள், ஊழியர்கள் ஆய்வுக்கூட்டம்

வியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017      வேலூர்
Image Unavailable

 

ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆரணி, வந்தவாசி, செய்யார், போளூர், திருவண்ணாமலை, செங்கம் ஆகிய பகுதிகளில் நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டம்

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி தலைமை தாங்கினார். மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி தேவநாதன், மாவட்டமுதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நடராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி சட்டப்பணிகள் குழுத்தலைவர் எஸ்.எழில்வேலவன் அனைவரையும் வரவேற்றார். இதில் மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி பேசுகையில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், வழக்குகளை விரைவில் முடிப்பது குறித்தும் விவரித்தார். மேலும் இதில் ஆரணி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் வெங்கடேசன், செயலாளர் திருஞானம், மாவட்ட சட்டப்பணிகள் குழு செயலாளர் ராஜ்மோகன் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து