முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷெல் எகோ மாரத்தான்2018 போட்டியில் பங்கேற்க விஐடி பல்கலைக்கழக அணி தகுதி

வியாழக்கிழமை, 28 டிசம்பர் 2017      வேலூர்
Image Unavailable

டீம் எகோ டைட்டான் ’வேலுார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த20 மாணவர்கள் இரண்டாம் கட்டெ ஷல் எகோ மராத்தான் ஆசியா2018 போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றுள்ளனர்.தேர்வுசெய்யப்பட்டுள்ள இந்தஅணி, இறுதிக்கட்ட தகுதிப்போட்டியில் பங்கேற்க சிங்கப்பூர் செல்கிறது. பிறநாடுகளிலிருந்தும் இத்தகைய அணிகள் அங்கு வருகின்றன. வடிவமைத்து, பரிசோதனை செய்து உலகில் மிகவும் சிக்கனமான திறன் மிக்க வாகனத்தை உருவாக்கும் போட்டியி பங்கேற்கின்றனர்.

மராத்தான்  போட்டி

டீம் எகோடைட்டான் அணியானது, ஒரு லிட்டர் பெட்ரோலில் 150 கிலோமீட்டர் ஓடும் வாகனத்தை தயார் செய்து வருகின்றனர். குறைந்தஎடை, அதிகபட்சதுாரம், மற்றும் எரிபொருள் சிக்கனம் என்பதை மனதில்கொண்டு இவற்றை உருவாக்கி வருகின்றனர்.டீம்எகோடைட்டான்கள், எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகபங்கேற்று, தரமானவற்றை உருவாக்கும் அனுபவத்தை பெற்றுள்ளனர். தலைமை ஏற்க முதிய அனுபவமும், புதுமையானதொழில்நுட்பமும், ஆசியமாணவர்களிடையே கலந்துரையாடும் அனுபவமும் கிடைக்கும் விதமாக இது அமைந்துள்ளது. கடினமானஉழைப்பு, அர்ப்பணிப்புடன் இந்த அணிசெல்வதால்,வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கும்.

இந்த போட்டிகுறித்து, டீம்எகோ–டைட்டான் அணிமேலாளர் பிரபாத்கேட்ராபால் கூறுகையில், ‘‘ கடந்த காலத்தில் ெஷல் எகோமாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனுபவங்கள் கிடைத்துள்ளன. உலகம் முழுவதும் இருந்தும் இளம் சக்தி மிகுந்த மூளைகள் சங்கமிக்க இந்த வாய்ப்பை ஷெஷல் கம்பெனி உருவாக்கி கொடுத்துள்ளது. மாணவர்கள் புதுமைபடைக்கவும், தங்களது கற்பனையை மெய்ப்பிக்கவும் ஒருவாய்ப்பாக அமையும். துாய்மையான, நிலையான எரிசக்தியை உருவாக்க இது பெரும் தீர்வாக அமையும்,’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து