முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தொழுநோய் விழிப்புணர்வு உறுதி மொழியேற்பு

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      வேலூர்

 

மகாத்மா காந்தி நினைவு தினம் உலக தொழுநோய் விழிப்புணர்வு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் ஜுனியர் ரெட்கிராஸ் ஜுனியர்கள், நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வ தொன்டர்கள் தேசிய பசுமைப்படை, பாரத சாரணீயர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் ஆசிரிய ஆசிரியைகள் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

விழிப்புணர்வு

நிகழ்விற்கு பள்ளி தலைமையாசிரியை கோ.சரளா தலைமை தாங்கினார். உதவித்தலைமையாசிரியை டி.என்.ஷோபா முன்னிலை வகித்தார். முன்னதாக ஜுனியர் ரெட்கிராஸ்கல்வி மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன் பள்ளி ஆசிரியர் சங்க செயலாளர் எ.கலைச்செல்வன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ப.சங்கீதா, உதவி திட்ட அலுவலர் ஜெ.கௌசல்யா, தேசிய பசுமைப்படை திட்ட பள்ளி ஒருங்கிணைப்பாளர் பி.பாலசந்தர் உதவி தலைமையாசிரியர்கள் ஜோன்பிரேமகுமாரி, எஸ்.ஜெகதீஸ்வரி, ஜுனியர் ரெட்கிராஸ் ஜுனியர்கள், நாட்டு நலப்பணி திட்ட தன்னார்வ தொன்டர்கள் தேசிய பசுமைப்படை, பாரத சாரணீயர்கள் உள்ளிட்ட பள்ளி மாணவியர் கலந்து கொண்டனர்.

மகாத்மா காந்தி நனைவு தினமான இன்று உணர்ச்சியற்ற தேமல் அல்லது படை போன்றோ, தொழுநோயினால் உடல் குறைபாடு உள்ளவர்களை எனது குடும்பத்திலோ அல்லது வீட்டின் அருகில் உள்ளவர்களோ சமூகத்திஅலா இருந்தால் உடன் அவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்க ஏற்பாடு செவய்வேன் என்று உறுதிமொழி ஏற்கிறேன். அவர்களை அன்பாகவும் எனது குடும்ப உறுப்பினர்கள் போலவும் வேறுபாடு இல்லாமல் உரிய மரியாதையுடன் நடத்துவேன், தொழுநோய் குணமாகக்கூடியது, ஆரம்ப நிலை சிகிச்சை உடல் குறைபாட்டை ஏற்படுத்தாது, அங்கஈனத்தை தடுக்கும், தொழுநோயாளிகளை ஒதுக்கக்கூடாது போன்ற விபரங்களை ஊர் முழுவதும் தெவிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். மகாத்மாவின் கனவை நனவாக்கும் வகையில் தொழுநோய் இல்லா இந்தியா உருவாக அனைவருடனும் இணைந்து ஒத்துழைப்பேன் என்று உறுதி கூறுதி கூறுகிறேன். என்று உறுதிமொழி ஏற்றனர்

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து