எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவில்லிபுத்தூர், தி.மு.க ஊழல் கட்சி என்று மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது என்றும் எந்த காலத்திலும் தி.மு.க ஆட்சியை பிடிக்க முடியாது என்றும் திருவில்லிபுத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
திருவில்லிபுத்தூரில் நகர கழகம், தொகுதி கழகம் சார்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபாமுத்தையா தலைமை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது,
சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஜெயலலிதாவின் பிறந்தவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அனைத்து பகுதிகளிலும் அ.தி.மு.கவினர் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். தற்போதுள்ள நிலையில் கட்சிக்கு விசுவாசமிக்க தொண்டர்கள் அ.தி.மு.கவில் உள்ளனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கி கொடுத்த இந்த கட்சிக்கு அழிவு என்பதே கிடையாது. ஆலமரம்போல் வளர்ந்து கொண்டுதான் இருக்கும். ஒன்றறை கோடி தொண்டர்கள் கொண்ட இந்த இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. அழிவது போன்று தோற்றத்தை சிலர் ஏற்படுத்துவார்கள்.
ஆனால் கட்சி அழியாது. 1996ல் இந்த அ.தி.மு.கவிற்கு எதிர்காலமே கிடையாது என்றுதான் சிலர் நினைத்தனர். ஆனால் அரசியல் வரலாற்றில் சரித்திர சாதனைகளை ஜெயலலிதா எட்டிப் பிடித்தார். இந்தியால் 3வது பெரிய கட்சியாக அ.தி.மு.க உருவெடுத்தது. ஆண்ட கட்சியே மீண்டு்ம் ஆளும் கட்சியாக வந்து அ.தி.மு.க மாபெரும் சக்தியாக வளர்ந்தது. எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் மக்கள் பணியாற்றி தமிழக முதல்வராக வந்தார்கள். ஆனால் இன்று சிலர் மக்கள் பணி எதுவும் செய்யாமல் உடனே முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகின்றனர். நடிக்கும் போதே எம்.ஜி.ஆர் ஒழுக்கமாக வாழ்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். நல்ல சிந்தனையுள்ள படங்களை தொடர்ந்து வழங்கினார். அண்ணா கட்சிக்கே அடையாளம் கொடுத்த எம்.ஜி.ஆர் வழியை பின்பற்றி ஜெயலலிதாவும் வாழ்ந்தார். மாபெரும் இந்த இயக்கத்தில் சாதாரண தொண்டனாக இருப்பதே ஒவ்வொறு தொண்டனும் பெருமையாக நினைக்கின்றான். சாதாரண தொண்டன் கூட சரித்திரத்தில் இடம் பிடிக்க முடியும் என்றால் அது அ.தி.மு.கவில் மட்டுமே முடியும். கட்சியில் 30ஆண்டுகள், 40ஆண்டுகள் உழைத்தவர்கள் எப்படி வேறு ஒரு சின்னத்திற்கு வேலை செய்ய முடியும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் சரித்திர சாதனைகளால் கிராம மக்கள் மனதில் இரட்டை இலை சின்னம் ஆழமாக பதிந்துவிட்டது. ஜெயலலிதாவின் வாக்குப்படி இந்த இயக்கம் 100ஆண்டுகள் ஆட்சியில் நீடிக்கும்.
தி.மு.க ஊழல் கட்சி என்று மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. எந்த காலத்திலும் தி.மு.க ஆட்சியை பிடிக்க முடியாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆன்மா அரசை வழி நடத்தி வருகின்றது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் நல்லாட்சி நடத்தி வருகின்றனர். ஜெயலலிதா செயல்படுத்திய திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அ.தி.மு.க அரசிற்கு தமிழக மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர், திரைப்பட இயக்குநர் ஜெயபிரகாஷ், முன்னாள் கழக அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி, கழக மகளிர் அணி இணைச்செயலாளர் சக்திகோதண்டம், மாவட்ட கழக பொருளாளர் ராஜவர்மன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் சிந்துமுருகன், பால்வளத்துறை தலைவர் வழக்கறிஞர் கண்ணன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைசெயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் மயில்சாமி, நகர கழக பொருளாளர் முருகன், திருவில்லிபுத்தூர் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சரோஜா, வத்ராப் ஒன்றிய கழக செயலாளர் சுப்புராஜ், நகர செயலாளர் அய்யனார், மாவட்ட கழக துணைச்செயலாளர் வசந்திமான்ராஜ், மாவட்ட மகளிரணி இணைச்செயலாளர் மீராதணலட்சுமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் முத்தையா, அரசு வழக்கறிஞர் ராஜா, கழக வழக்கறிஞர் மங்களசாமி, வீட்டுவசதி சங்க தலைவர் ராமையாபாண்டியன், மோதிரம் பொன்னுச்சாமி, ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் கதிரவன், ராஜபாளையம் நகர செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், குருசாமி, அரசு ஒப்பந்ததாரர் குருசாமி, ராஜபாளையம் நகர அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் முருகேசன், சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் ராமராஜ், ஒன்றிய கழக துணைச்செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன், விஜயகரிசல்குளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
புனித வெள்ளி: தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
29 Mar 2024சென்னை : புனித வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
-
கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் : மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
29 Mar 2024மதுரை : கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.