முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலையில் தலைமை தபால் நிலையத்தில் கடவுச்சீட்டு மையம் எம்பி ஏழுமலை தொடக்கிவைத்தார்

வியாழக்கிழமை, 1 மார்ச் 2018      திருவண்ணாமலை
Image Unavailable

 

இந்திய வெளியுறவுத் துறை, இந்திய அஞ்சல் துறை இணைந்து திருவண்ணாமலை தலைமை அஞ்சல் நிலையத்தில் தபால் நிலைய கடவுச்சீட்டு சேவை மையம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

சேவை மையம்

விழாவுக்கு தமிழக முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் எம்.சம்பத் முன்னிலை வகித்தார். மண்டல கடவுச் சீட்டு அலுவலர் பி.கே.அசோக்பாபு வரவேற்றார். ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி சேவல் வி.ஏழுமலை தலைமை வகித்து தபால் நிலைய கடவுச்சீட்டு சேவை மையத்தைத் தொடங்கி வைத்தார். ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்புரையாற்றினார். செய்யாறு சட்டப்பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன் வாழ்த்துரை வழங்கினார். பின்னர், பொதுமக்களிடம் இருந்து புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

மண்டல கடவுச்சீட்டு அலுவலர் அசோக்பாபு கூறும்போது, "பாஸ்போர்ட் பெற சென்னை அலுவலகங்களுக்கு வர வேண்டும். அந்த நிலை மாற்றப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் பாஸ்போர்ட் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் தலைமை அஞ்சல் நிலையங்களில் பார்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. புகைப்படம் உட்பட அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்படும். தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் திருவண்ணாமலையில் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்" என்றார். சென்னை நகர மண்டல இயக்குநர் ஏ.கோவிந்தராஜன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து