தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள 'ஆய்வக பராமரிப்பு உதவியாளர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
எண்ணங்கள் செயலாகின்றன. மேகம் இல்லாத நாட்களில் தென் வானத்தை அன்னாந்து பாருங்கள், அங்கு பிரகாசமாகத் தெரிவது தான் மில்கி வே என்ற நம் அண்டம். அந்த மில்கி வேயில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னுகிறது. ஒவ்வொரு நட்சத்திரத்தை சுற்றிலும் பல்வேறு விண்மீன்கள் உள்ளன. நமது பூமி சூரியனை சுற்றுகிறது. சூரியன் நம்து கேலக்ஸியான மில்கி வேயை சுற்றுகிறது. மில்கி வேயே பிரபஞ்சத்தை சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது. நமது மில்கி வேயைப்போல் ஆயிரக்கண க்கான மில்கி வேக்கள் உள்ளன. இதைப் பார்க்கும் போது ஒரு பெரும் சக்தி இந்த பிரபஞ்சத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறது என்று தெரிகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி சந்திராயன் -1 திட்டத்தின் முக்கிய கண்டுபிடிப்புகளை பற்றி அமெரிக்காவில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் நாசா, ஜேபிஎல், இஸ்ரோ விஞ்ஞானிகளோடு நானும், இஸ்ரோ தலைவர் மாதவன் நாயரும் கலந்து கொண்டோம். இஸ்ரோவும், நாசாவும் சேர்ந்து உருவாக்கிய எம்3(மூன் மினராலஜி மேப்பர்) என்ற சென்சார் உபகரணம் எப்படி தண்ணீர் படிகங்களை கண்டுபிடித்தது என்பதைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் குறித்து விவாதித்தோம். அப்போது நாசா ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் ஒரு சிறப்பைப் பற்றி கூறினார். அதாவது கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு நாடுகள் (அமெரிக்கா, சீனா, ரஷ்யா, ஜப்பான்) தனித் தனியே செய்த முயற்சியால் கண்டுபிடிக்கப்படாதது, இந்தியாவின் சந்திராயனால் சாத்தியப்பட்டது,
இந்திய-அமெரிக்க கூட்டு முயற்சியால் எம்3 தண்ணீரை கண்டறிந்தது என்ற ஆராய்சி முடிவுகளை அறிந்த போது இந்தியாவை நினைத்து மிக்க மகிழ்ச்சியும், பெருமையும் அடைந்தேன். எனவே, மாணவர்களே இந்தியாவின் அறிவியல் மாட்சிமையை உலகிற்கு பரைசாற்றும் விதமாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது. அது எப்படி சாத்தியமாகிறது.
நீ நீயாக இரு. தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நினைவுக்கு யார் வருகிறார்? தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களை பார்த்தவுடன் நம் மனதில் யார் வருகிறார்கள்? ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியை பார்க்கும் போது அலெக்சாண்டர் கிரகாம் பெல் நம் மனதில் தோன்றுகிறார். ஏன் கடலின் நிறமும், அடி வானத்தின் நிறமும் நீலமாக இருக்கின்றது என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை. ஆனால் லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம் செய்யும்போது ஒரு விஞ்ஞானியின் மனதில் அந்த கேள்வி எழுந்தது. அந்த கேள்விக்கான பதில் தான் ஒளிச்சிதறல். அது தான் சர் சி.வி. ராமனுக்கு ராமன் விளைவிற்கான நோபல் பரிசை பெற்று தந்தது. அஹிம்சா தர்மம் என்ற ஆயுதத்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று உலகிற்கே அஹிம்சா தர்மத்தை போதித்தவர் மகாத்மா காந்தியடிகள். எனவே, ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே! ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக் கொண்டு இருக்கிறது. ஏனென்று தெரியுமா, உங்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. அந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் நானாக இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்துவிட்டீர்கள் என்று அர்த்தம். அதாவது நீ நீயாக இரு, ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தோடு இருக்க வேண்டும், மற்றவர்கள் போல இருக்க வேண்டாம் என்பது தான் அதன் அர்த்தம். 60 கோடி இளைஞர் சமுதாயம் மன எழுச்சியடைந்துள்ள 60 கோடி இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறை எழுச்சியுற வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் அது மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும். இந்த திறமை பெற்ற மாணவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர். நமது நாடு, நமது பாரம்பரியம், நமது நாட்டின் வளம், நமது நாட்டிற்கேற்ற வளர்ச்சி முறை, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வு, முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற பழக்க வழக்கங்கள் இவைகளை அடிப்படையாக கொண்டு, இந்தக்கால முறைக்கு ஏற்றாற் போல் நம்மை நாம் அறிவுப்பூர்வமாக மாற்றி அமைக்கவேண்டும். நாம் நமது முகவரியை இழக்காமல் நமது மக்களை அறிவார்ந்த சமுதாய மாறுமலர்ச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த சமயத்தில் நான் ஓரு முறை இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றிப் பாடிய கவிதை வரிகள் என் நினைவுக்கு வருகிறது.
அந்தக் கவிதையின் தலைப்பு இலட்சியம். இலட்சியம். நான் ஏறிக் கொண்டே இருக்கிறேன், எங்கிருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன், எங்கிருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன், எங்கிருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா இறைவா, இறைவா, நூறு கோடி மக்கள் இலட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும், இன்ப அமைதியையும் உழைத்தடைய அருள்வாயாக. இந்த கவிதையின் கருத்து என்ன? நாம் வாழ் நாள் முழுவதும் படித்துக் கொண்டிருக்கிறோம். வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இவைகளைச் செய்யும் போது நமக்கு வாழ்வில் ஒரு இலட்சியம் வேண்டும். அதாவது நமது எண்ணம் உயர்வாக இருந்தால் அரும் பெரும் இலட்சியங்கள் தோன்றும், பெரும் இலட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும். எண்ணம் உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும். இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்களை பார்க்கிறேன். நீங்கள் எல்லோரும் வெற்றியடைய, வளமான வாழ்வு பெற ஒரு சிறு கவிதை மூலம் என் கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அந்த கவிதையின் தலைப்பு, "வாழ்வில் நான் பறந்து கொண்டேயிருப்பேன்" என்பதாகும்.
நான் பறந்து கொண்டேயிருப்பேன் நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன், நான் பிறந்தேன் நற்பண்புகளுடன், நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன், நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த, நான் பிறந்தேன் ஆராயச்சி உள்ளத்துடன், நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க, நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன். தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம். பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன். பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும். நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை உன்னால் வெற்றியடைய முடியும். நீ யாராக இருந்தாலும் உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய்.
தொகுப்பு : பரஞ்சோதி
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சிக்கன் ரிம் ஜிம் கபாப்![]() 3 days 6 hours ago |
பக்காலா மீன் வறுவல்![]() 6 days 7 hours ago |
பாசி பருப்பு பாயாசம்![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 01-07-2022.
01 Jul 2022 -
சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகே ஹாங்காங்கிற்கு ஜனநாயகம் துவங்கியது : சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சு
01 Jul 2022பெய்ஜிங் : சீனாவுடன் மீண்டும் இணைந்த பிறகுதான் ஹாங்காங்கிற்கு உண்மையான ஜனநாயகம் தொடங்கியது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்தார்.
-
கடந்த 10 நாட்களில் தமிழகத்தில் கலை கல்லூரிகளில் சேர 3 லட்சம் பேர் விண்ணப்பம்
01 Jul 2022சென்னை : தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானதும் கல்லூரிகளில் சேருவதற்கு மாணவர்கள் தயாராகி வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 163 அரசு கலைக்கல்லூரிகள் உள்ளன.
-
உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் ஆயுத உதவி: ஜோபைடன்
01 Jul 2022வாஷிங்டன் : உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
-
வெங்கையா நாயுடு பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து
01 Jul 2022சென்னை : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பிறந்தநாளையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவர்னர் மாளிகையில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்க 23 நடமாடும் வாகனங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க ஸ்டாலின் : 8 துணை இயக்குனர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கினார்
01 Jul 2022சென்னை : சென்னை, நொச்சிக்குப்பத்தில் காசநோய் இல்லா தமிழ்நாடு – 2025 என்ற இலக்கை அடைய அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 23 மாவட்டங்களுக்கு ரூ.10.65
-
தடய அறிவியல் துறை பயன்பாட்டிற்காக 14 நடமாடும் ஆய்வக வாகனங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் : சர்வதேச தரச் சான்றிதழ் பெற்றதற்கும் வாழ்த்து
01 Jul 2022சென்னை : சென்னை தலைமைச்செயலகத்தில், தமிழ்நாடு தடய அறிவியல் துறையின் பயன்பாட்டிற்காக 3 கோடியே 92 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள 14 நடமா
-
தஞ்சை மியூசியத்தில் இருந்து காணாமல் போன 300 வருட பழமையான புராதன பைபிள் லண்டலின் கண்டுபிடிப்பு
01 Jul 2022லண்டன் : தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் இருந்து காணாமல் போன தமிழில் முதலில் மொழி பெயர்க்கப்பட்ட புதிய ஏற்பாடு பைபிள் லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய மருத்துவர்கள் தினம் : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
01 Jul 2022சென்னை : தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தொழில் புரிய ஏதுவான மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 3-வது இடம் : டுவிட்டரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
01 Jul 2022சென்னை : தொழில் புரிய ஏதுவான மாநிலங்களுக்கான தரவரிசையில் தமிழகம் 3-வது இடத்தை பெற்றதற்காக தொழில் துறை அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்
-
தமிழகத்தில் உயர் தொழில் நுட்ப பூங்கா அமைக்க சிங்கப்பூர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
01 Jul 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில், சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்ட ஐ.ஜி.எஸ்.எஸ்.
-
பாகிஸ்தானில் 14 மணி நேர மின்வெட்டு: இணையதள சேவைகள் முடங்கும் அபாயம்
01 Jul 2022கராச்சி : பாகிஸ்தானில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் 14 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
-
உள்கட்சி தேர்தல்: நிர்வாகிகளுடன் பிரேமலதா 4-ம் தேதி ஆலோசனை
01 Jul 2022சென்னை : தே.மு.தி.க. உள்கட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் வருகிற 4-ம் தேதி நடைபெறுகிறது. கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.
-
4-ம் தேதி சென்னையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த ஏற்பாடு : கோவை, மதுரையில் உயர்தொழில்நுட்ப நிறுவனங்கள்: அமைச்சர் பேட்டி
01 Jul 2022சென்னை : வரும் 4-ம் தேதி சென்னையில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
-
டுவிட்டரில் தனது கட்சி பொறுப்பை மாற்றினார் எடப்பாடி பழனிசாமி
01 Jul 2022சென்னை : அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் என்ற தனது கட்சி பொறுப்பை தனது டுவிட்டர் சமூக வலைதளத்தில் அ.தி.மு.க தலைமை நிலையச்செயலாளர் என்று மாற்றியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
-
சர்ச்சை பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் தீக்கிரையாக்கி விட்டது: நாட்டு மக்களிடம் நுபுர் சர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் : வழக்குகளை மாற்றக்கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் கண்டனம்
01 Jul 2022புதுடெல்லி : முஸ்லிம்களின் இறைத்தூதரை அவமதிக்கும் வகையில் நுபுர் சர்மா பேசியது நாடு முழுவதும் முஸ்லிம்களை வெகுண்டெழச் செய்துள்ளது.
-
வெள்ளப் பெருக்கு குறைந்ததால் குற்றாலம் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
01 Jul 2022தென்காசி : குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர்.
-
தி.மு.க. அரசை கண்டித்து 5-ம் தேதி தமிழகம் முழுவதும் பா.ஜ.க. உண்ணாவிரதம்
01 Jul 2022சென்னை : தி.மு.க.
-
சிங்கப்பூரில் கழிவு நீரில் இருந்து தயாரிக்கப்பட்ட "ஜில்" பீர் : குடிமகன்கள் வரவேற்பு
01 Jul 2022கோலாலம்பூர் : சிங்கப்பூரில் கழிவுநீரில் இருந்து மறுசுழற்சி செய்யப்படும் நீரில் இருந்து தயாரிக்கப்படும் பீருக்கு மதுபிரியர்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது.
-
மீண்டும் வர்ணனைக்கு திரும்பிய ரவி சாஸ்திரி
01 Jul 2022இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் 2021 டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது.
-
செஸ் ஒலிம்பியாட் வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
01 Jul 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, காமராஜர் சாலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி குறித்து விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வக
-
பாவோ நூர்மி ஈட்டி எறிதல் போட்டி: புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ரா
01 Jul 2022ஸ்டாக்ஹோம் : பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியில் 89.30 மீட்டர் தூரம் எறிந்து தேசிய சாதனை படைத்திருந்தார்.
-
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை : நிரந்தர பணி நியமனம் செய்வதில் என்ன பிரச்சினை என கேள்வி
01 Jul 2022மதுரை : ஆசிரியர்கள் நியமனம் மாணவர்களின் நலன் சார்ந்தது என்ற தெரிவித்த ஐகோர்ட் மதுரை கிளை தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்
-
பெரும்பான்மையை நிரூபிக்கிறார் ஷிண்டே: மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் ஜூலை 4-ல் நம்பிக்கை வாக்கெடுப்பு
01 Jul 2022மும்பை : பா.ஜ.க ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் குழுத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றுக் கொண்ட நிலையில், மகாராஷ்டிர சட்டப்பேரவையில் 4-ம் தேதி (வரு
-
காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
01 Jul 2022சென்னை : காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.