எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை. - சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் செட்டு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் க.லதா, கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மரு.சி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி துவங்கி 5 ஆண்டுகள் படித்து முடித்த முதல் செட்டு மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் பட்டங்களை வழங்கி பேசுகையில்,
இன்று சிவகங்கை மண்ணிற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த நன்னாளாகும். பிற்பட்ட பகுதியைச் சேர்ந்த இம்மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த புரட்சித்தலைவி அம்மா எண்ணற்ற பலத்திட்டங்களை இம்மாவட்டத்திற்கு வழங்கி செயல்படுத்திய போதிலும் மருத்துவக் கல்லூரி அமைத்து செயல்படுத்தியது மிக உன்னதமான திட்டமாகும். கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் தங்கள் பகுதியிலேயே படித்து சிறந்து விளங்கிட வேண்டுமென தமிழகத்தில் அனைத்துப் பகுதிகளிலும் மருத்துவக் கல்லூரி துவக்கியது மட்டுமின்றி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு முன்பு இருந்த படிக்கும் மாணவர்களின் சீட்டுகளின் எண்ணிக்கையைவிட 1000 சீட்டு அதிகரித்து மாணவ, மாணவியர்களுக்கு வழங்கியுள்ளார்கள். அதன் மூலம் எண்ணற்ற மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகிறார்கள். அதனடிப்படையில் இன்று சிவகங்கையில் 5 ஆண்டுகள் படித்து மருத்துவப் பட்டம் பெற்று முதல் செட்டு மாணவ, மாணவியர்கள் எல்லோருடைய ஆசி பெற்று இந்த பட்டப்;படிப்புடன் மேலும் உயர்படிப்பு முடித்து சிறந்த மருத்துவராக பணியாற்றுவதுடன், கிராமப் பகுதிகளிலும் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டு பொதுமக்களுக்கு தங்களது பங்களிப்பை வெளிப்படுத்த வேண்டும். பொதுவாக கிராமப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும்போது தங்கள் உடல்நிலையை குறித்து பல்வேறு கேள்விகளை கேட்பார்கள். அவர்களுக்கு கொஞ்சம் பொறுமையுடன் பதிலளித்து புன்னகையுடன் பேசினால் போதும். எவ்வளவு மருந்துகள் கொடுத்தாலும் அவர்களுக்கு தீராத சந்தேகம் சிறு புன்னகை என்ற அருமருந்தின் மூலம் அவர்களுக்கு நோய் குணமடையும் என்ற நம்பிக்கை உருவாகும். பணிகளில் மகத்தான பணி மருத்துவப் பணிமட்டுமே. இதை நகர்பகுதி மட்டுமின்றி கிராமப் பகுதிகளிலும் முழுமையாக பெற்று பயன்பெற வேண்டும் என்பதே மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கனவாகும். அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் இந்தியாவிலேயே பொது சுகாதாரத்தை சிறப்பாக வழிநடத்தி தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியவர் ஆவார். அவர் வழியில் வழி நடத்திச் செல்லும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அம்மா அவர்களின் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பராமரிக்கப்பட்டு அதிகளவில் படுக்கை வசதி கொண்ட கட்டடங்கள் கட்டி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்பொழுது சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் விபத்து சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தசை சிதைவு அடைந்த மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை வழங்கிட புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதுபோல் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு தேவையான அனைத்துத் திட்டங்களும் அரசு வழங்க தயாராக உள்ளது. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வதுடன் இங்கு படிக்கும் மாணவ, மாணவியர்களும் மருத்துவத்துறையில் சிறந்த சாதனையாளராக வரவேண்டுமென வாழ்த்திக் கொள்கிறேன் என மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மரு.சி.விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவத்தார்.
பின்னர், முதல் செட்டில் பயின்ற 96 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்று மற்றும் பட்டங்களை மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர்.செந்தில்நாதன், மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் மரு.ஏ.எட்வின் ஜோ, சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.வனிதா, துணை முதல்வர் மரு.மல்லிகா, மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.மருதுபாண்டி, மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், பேராசிரியர்கள், மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.