முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்

வியாழக்கிழமை, 3 மே 2018      அரசியல்
Image Unavailable

புது டெல்லி, கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் மதத்தின் பெயரில் வாக்கு சேகரிப்பதாக தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் புகார் செய்துள்ளனர்.

மத்திய அமைச்சரும் பா.ஜ.க. முன்னாள் தலைவருமான நிதின் கட்காரி தலைமையில் மத்திய அமைச்சர்கள் ரவி சங்கர் பிரசாத், முக்தர் அப்பாஸ் நக்வி, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்துக்கு நேரில் சென்று ஒரு புகார் அளித்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, நிதின் கட்காரி கூறும் போது,

கர்நாடகாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் குலாம் நபி ஆசாத் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரச்சாரம் செய்தனர். அப்போது முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது இஸ்லாம் மதத்துக்கு செய்யும் சேவை எனக் கூறி வாக்கு சேகரித்தனர். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி சாதி, மதத்தின் பெயரில் வாக்கு சேகரிப்பது குற்றம். எனவே, மதத்தின் பெயரில் வாக்கு சேகரித்த காங்கிரசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்துள்ளோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து