முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த சக்தியாலும் தேசத்தைப் பிரிக்க முடியாது; அரசுக்கும் வீரர்களுக்கும் முழு ஆதரவாக இருப்போம்- ராகுல்

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  புல்வாமா தாக்குதல் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எந்த சக்தியாலும் தேசத்தைப் பிரிக்க முடியாது எனவும் அரசுக்கும் வீரர்களுக்கும் முழு ஆதரவாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்று  முன்தினம் மாலை 3 மணிக்கு புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்றபோது, அதன் மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப்படை தீவிரவாதி 350 கிலோ வெடிபொருட்களுடன் காரை மோதி வெடிக்கச் செய்தார்.
இந்தத் தாக்குதலில் பேருந்தில் பயணம் செய்த 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த 38 சிஆர்பிஎப் வீரர்கள், பாதாமிபாக் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஏராளமான வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் தீவிரவாதத் தாக்குதலுக்கு பல்வேறு மாநில முதல்வர்களும் அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.  இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ''இந்திய அரசுக்கும் ராணுவ வீரர்களுக்கும் நானும் எனது காங்கிரஸ் கட்சியும் உறுதுணையாக இருப்போம். அடுத்த இரண்டு நாட்களுக்கு மற்ற எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை.

இது வருத்தத்துக்கான, மரியாதை அளிப்பதற்கான நேரம். அஞ்சலி செலுத்துவதற்கான சமயம். பயங்கரமான இந்தத் தாக்குதல் தவறானது. நம்முடைய வீரர்கள் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறை முற்றிலும் வெறுக்கத்தக்க வகையில் உள்ளது. நாம் அனைவரும் நம்முடைய வீரர்களின் பின்னால் நிற்போம். எந்த சக்தியாலும் நம்முடைய தேசத்தைப் பிரிக்கவோ சேதப்படுத்தவோ முடியாது.

ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர்க்கட்சிகளும் கடினமான இந்த நேரத்தில், அரசுடனும் வீரர்களுடனும் நிற்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இப்போது மற்ற கேள்விகளுக்கோ, அரசியல் சர்ச்சைகளுக்கோ பதில் கூறும் நேரமல்ல. நாட்டின் நலன் தவிர வேறு எது குறித்தும் இப்போது பேச விரும்பவில்லை'' என்றார் ராகுல் காந்தி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து