முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமாதானம் செய்ய வந்த சோனியாவிடம் மம்தா கோபம்

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மக்களவை வளாகத்தின் செண்ட்ரல் ஹாலில் சோனியா காந்தியும் மம்தா பானர்ஜியும் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்த போது சோனியா காந்தி மம்தாவை சமாதானம் செய்யும் நோக்கத்துடன் வர மம்தா பானர்ஜி கோப வார்த்தைகளை வெளியிட்டார்.

மேற்கு வங்க காங்கிரஸ் உறுப்பினர் ஆதிர் ராஜன் சவுத்ரி சாரதா சிட்பண்ட் ஊழலில் மம்தாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற ரீதியில் பேச சோனியா காந்தி மம்தாவை சமாதானம் செய்ய முயன்று ‘நாம் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி கொண்டிருக்கிறோம், நாம் நண்பர்கள்’ என்று சோனியா கூற சமாதானத்தை ஏற்காத மம்தா பானர்ஜி ‘நாங்கள் இதனை நினைவில் வைத்துக் கொள்வோம்’ அதாவது காங்கிரஸ் உறுப்பினர் பேச்சை மறக்க மாட்டோம் என்ற தொனியில் சோனியாவிடம் கூறியதாக தனியார் தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் நிதி மோசடிகளைத் தவிர்க்க சட்டம் இயற்ற வேண்டும் என்று கூறிய ஆதிர் ராஜன் சவுத்ரி, சாரதா சிட்பண்ட் ஊழலில் மம்தாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்ற ரீதியில் பேசினார். இவரது இந்தப் பேச்சை பா.ஜ.க. உறுப்பினர்கள் கரகோஷம் செய்தும், நெஞ்சை அடித்துக் கொண்டும் வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து