முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.ம.மு.க. பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் ஒருமனதாக தேர்வு

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2019      அரசியல்
Image Unavailable

சென்னை, அ.ம.மு.க.வின் துணை பொதுச் செயலாளராக இருந்த டி.டி.வி. தினகரன், கட்சியின் பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அ.ம.மு.க) உதயமானது. டி.டி.வி. தினகரனால் தோற்றுவிக்கப்பட்ட அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி. தினகரன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், அ.ம.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி தினகரன், நேற்று கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளார். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர், அவர் அ.ம.மு.க. தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும், அ.ம.மு.க.வை தனிக்கட்சியாக பதிவு செய்யும் வேலைகள் நடப்பதாகவும் நடிகை சி.ஆர். சரஸ்வதி நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து