முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15 ஓவரில் 161 ரன் எடுத்தது - கொல்கத்தாவை வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2019      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத் : ஐ.பி.எல். தொடரில் நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 159 ரன்களை எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் அதிக பட்சமாக கிறிஸ் லின் 51 ரன்னும், சுனில் நரைன் 25 ரன்னும், ரிங்கு சிங் 31 ரன்னும் எடுத்தனர். பந்து வீச்சாளர்கள் தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்டும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டும், சந்தீப் சர்மா மற்றும் ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஐதராபாத் அணி 15 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 161 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரரான வார்னர் 67 ரன் எடுத்து அவுட் ஆனார். பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தார். அவர்  80 ரன் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து