முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

34-ம் நாள் உற்சவம்: அத்திவரதருக்கு ரோஸ் நிற பட்டாடை அலங்காரம்

சனிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2019      ஆன்மிகம்
Image Unavailable

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அத்திவரதர் உற்சவத்தின் 34-ம் நாளான நேற்று பெருமாள், இளம் பச்சை கலந்த அடர் ரோஸ் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்.

இக்கோவிலில் 34-வது நாளான நேற்று அத்திவரதர் பச்சை மற்றும் ரோஸ் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதிகாலை 5 மணிக்கு தரிசனம் தொடங்கியது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வரதரை தரிசனம் செய்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆடிப்பூரத்தையொட்டி, வரதராஜபெருமாள் கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றதால் தரிசன நேரத்தில் சிறு மாற்றம் செய்யப்பட்டது. பிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என கோவில் நிர்வாகம் அறிவித்தது.

ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் முடிந்த பிறகு, இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு வரை அத்திவரதரை தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதுவரை 44 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்திருப்பதாக காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து