முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் சவரன் ரூ. 30,024-க்கு விற்பனை

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2019      வர்த்தகம்
Image Unavailable

சென்னை : சென்னையில் நேற்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 96 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.30 ஆயிரத்து 24-க்கு விற்பனையானது. 

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. கடந்த 13-ம் தேதி பவுனுக்கு ரூ. 29 ஆயிரத்தை தாண்டியது. இதையடுத்து தங்கம் பவுனுக்கு ரூ.30 ஆயிரத்தை விரைவில் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ரூ. 30 ஆயிரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.நேற்று முன்தினம் காலை பவுனுக்கு ரூ. 288 உயர்ந்து தங்கம் விலை ரூ. 30 ஆயிரத்து 120-க்கு விற்றது. ஆனால் மாலையில் சற்று விலை குறைந்தது. பவுன் 29,928-க்கு விற்பனை ஆனது.

இந்த நிலையில் நேற்று காலை தங்கம் பவுனுக்கு மீண்டும் ரூ. 30 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ. 96 அதிகரித்து ரூ. 30 ஆயிரத்து 24-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் மாலை ரூ. 30 ஆயிரத்துக்குள் சென்ற தங்கம் விலை நேற்று காலை மீண்டும் உயர்ந்து ரூ.30 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த 5 நாட்களில் பவுனுக்கு ரூ. 496 உயர்ந்து இருக்கிறது. வெள்ளி கிலோவுக்கு ரூ. 200 உயர்ந்தது. ஒரு கிலோ வெள்ளி ரூ.55 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் ரூ.55-க்கு விற்பனையாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து