முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது: காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் சோனியா பேச்சு

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்று காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியாகாந்தி பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

டெல்லியில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கே.சி.வேணுகோபால், ஏ.கே.அந்தோனி, கே.எஸ்.அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது,

பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இழப்புகள் பெருகி வருகின்றன. பெருகி வரும் இழப்புகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப அரசு முன்னெப்போது இல்லாத வகையில் வெறுப்பு அரசியலில் ஈடுபடுகிறது. ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது. உத்தரவுகள் மிகவும் ஆபத்தான முறையில் தவறாக பயன்படுத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. காந்தி, படேல், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் உண்மையான செய்திகள் தவறாக சித்தரிக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது என பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து