முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்ஆப்பிரிக்கா தொடர் நாளை ஆரம்பம்: சாதனை படைக்க கோலி - ரோகித் இடையே ஆரோக்கியமான போட்டி

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

தரம்சாலா : டி20 போட்டியில் அதிக ரன், அதிகமுறை 50 ரன்களுக்கு மேல் என்ற சாதனைகளுக்காக விராட் கோலி - ரோகித் சர்மா இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. முதல் ஆட்டம் தரம்சாலாவில் நடக்கிறது. மூன்று போட்டிகளில் சிறப்பாக விளையாடி சாதனைகளை தக்க வைத்துக் கொள்ள விராட் கோலி, ரோகித் சர்மா இடையே ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டுள்ளது.

டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 2422 ரன்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி 2369 ரன்கள் அடித்துள்ளார். விராட் கோலி 53 ரன்கள் பின்தங்கியுள்ளார். மூன்று ஆட்டங்களிலும் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினால் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பார். ஒருவேளை விராட் கோலி சிறப்பாக விளையாடி, ரோகித் சர்மா சோபிக்காவிடில் விராட் கோலி முன்னிலை பெற்று விடுவார்.

ரோகித் சர்மா நான்கு சதங்களுடன் 21 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். விராட் கோலி சதம் ஏதும் அடிக்காவிடிலும் 21 அரை சதங்கள் அடித்துள்ளார். இந்தத் தொடரில் யார் அதிக அரைசதம் அடிக்கிறார்களோ? அவர்கள் சாதனைப் பட்டியலில் முன்னிலை வகிப்பார்கள். இதனால் இருவருக்கும் இடையில் சாதனைகள் படைக்க ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து