முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2020 நவம்பரில் பிபா பெண்கள் உலக கோப்பை: இந்தியாவில் நடக்கிறது

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பிபா பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்த பெரும்பாலான நாடுகள் விருப்பம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் உலகக்கோப்பை போட்டியை நடத்தும் உரிமையை இந்தியா பெற்றது.

உலகக்கோப்பை போட்டியை எப்போது நடத்தலாம் என்பது குறித்து முடிவு எடுக்க பிபாவின் ஏற்பாடு குழு ஆலோசனை நடத்தியது. சுரிச் நகரில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதியில் இருந்து 21-ம் தேதி வரை உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால், எந்தெந்த இடத்தில் போட்டிகளில் நடைபெறும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை. கொல்கத்தா, புவனேஸ்வர், அகமதாபாத், கோவா, நவி மும்பை ஆகிய இடங்களை பிபா அணி பார்வையிட்டுள்ளது என்று தொடருக்கான இயக்குனர் ரோமா கன்னா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து