எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : ஸ்டாலினுக்கு வெள்ளை அறிக்கை தவிர வேறு எதுவுமே தெரியாது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடுமையாக தாக்கி பேசினார்.
பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சர் ஆகியோரின் ஆணைக்கிணங்க பிறந்தநாள் பொதுக்கூட்டம் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் திருமங்கலம் தொகுதி கல்லுப்பட்டியில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு கல்லுப்பட்டி ஒன்றிய கழக செயலாளர் தலைமை தாங்கினார், ஒன்றிய கழக செயலாளர்கள் மகாலிங்கம், அன்பழகன், நகர செயலாளர் விஜயன், பேரூர் கழக செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், நெடுமாறன், முன்னாள் சேர்மன்கள் ஆண்டிச்சாமி, மாணிக்கம், தமிழழகன், பாவடியான், ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட கழக துணைச்செயலாளர் ஐயப்பன், மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் திருப்பதி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்செல்வம் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.
இந்த கூட்டத்திற்கு அ.தி.மு.க அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், தலைமை கழக பேச்சாளர்கள், சுறு, சுறு சுப்பையா, ஏ.ஜெ.ஏங்கல்ஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் கே.மாணிக்கம், பெரியபுள்ளான்(எ)செல்வம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர் மற்றும் இக்கூட்டத்தில் கழக அமைப்பச்செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெயராமன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.தமிழரசன், கழக அம்மா பேரவை இணைச்செயலாளர் இளங்கோவன், கழக அம்மா பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல், மாவட்ட கழக நிர்வாகிகளய் பஞ்சவர்ணம், பஞ்சம்மாள், மாவட்ட அணிச்செயலாளர்கள் வேலுச்சாமி, போத்திராஜா, ஒன்றிய கழக செயலாளர்கள் செல்லப்பாண்டி, ரவிச்சந்திரன், பிச்சைராஜன், ராஜா, பேரூர் கழக செயலாளர்கள் கொரியர்கணேசன், பாப்புரெட்டி, குமார், அழகுராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:
பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்தநாள் விழாவை கழகத்தின் சார்பில் குடும்ப விழாவாக நாம் கொண்டாடி வருகின்றோம் ஆனால் தி.மு.க.வில் அண்ணாவையே மறந்து விட்டு ஒரு குடும்ப கட்சியாக இருந்து வருகிறது இந்த இயக்கத்தை 1000 ஆண்டுகள் ஆனாலும் கூட யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது அந்த அளவு மிகப்பெரிய ஸ்தல விருட்சமாக இந்த இயக்கம் தமிழகத்தில் உள்ளது, பேரறிஞர் அண்ணா தமிழ்மொழிக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் அர்ப்பணித்து வாழ்ந்தார், தன் பேச்சாற்றலால் அனைவரையும் ஈர்த்தார். தேசிய கட்சிகள் எல்லாம் மாநிலங்களை ஆண்டபோது மாநில கட்சியும் ஆட்சிக்கு வரும் என்று உலகிற்கு உணர்த்தியவர் பேரறிஞர் அண்ணா. ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திராவிட இயக்கத்தை தோற்றுவித்தவர் ஆனால் இன்றைக்கு தி.மு.க.வோ அதை குடும்ப கட்சியாக மாற்றியுள்ளது, அண்ணாவின் கொள்கைகளையும், லட்சியங்களையும் காப்பாற்ற அண்ணாவின் பெயரில் இயக்கத்தை ஆரம்பித்து அண்ணா கொள்கைகளை வைத்து புரட்சித்தலைவர் அ.தி.மு.க வை உருவாக்கினார், அதன் பின் அம்மா அவர்களும் சிந்தாமல் சிதறாமல் அண்ணாவின் லட்சியத்தை காப்பாற்றினார் அதனை தொடர்ந்து தற்போது முதலமைச்சரும், துணைமுதலமைச்சரும் இந்த இயக்கத்தை புரட்சித்தலைவர் எதற்காக உருவாக்கினாரோ அதை நிறைவேற்றும் வகையில் கழக பணியாற்றி வருகின்றனர்.
வாரிசு இல்லாமல் தலைமுறை, தலைமுறையாக மக்கள் பணியினை ஒரு இயக்கத்தால் செய்ய முடியும் என்பதை இன்றைக்கு கழகம் நிரூபித்துள்ளது, முதலமைச்சர் பதவியேற்கும் பொழுது இந்த அரசு 2 நாட்கள் கூட தாங்காது என்று கூறியவர்கள் மத்தியில் இன்றைக்கு 2 ஆண்டுகள் பல்வேறு சரித்திர சாதனை படைத்து அதன் மூலம் இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் கூட இந்த இயக்கம் தான் மக்கள் பணியை செய்யும் என்ற வரலாற்று சாதனையை சத்தமில்லாமல் முதலமைச்சர் படைத்துள்ளார், 2 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் பொறுப்பு ஏற்கும் பொழுது இவர் அம்மாவைப்போல் திட்டங்களை செய்வாரா என்று மக்கள் நினைத்தார்கள் ஆனால் இன்றைக்கு அம்மாவைப்போல் இவர் திட்டங்களை செய்கிறார் என்று மக்களே கூறிவருகின்றனர். இதையெல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் பல்வேறு பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் அதை மக்கள் ஒரு போதும் நம்பமாட்டார்கள்.
மக்கள் நலனுக்காகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழக இளைஞர்கள் முன்னேற்றத்திற்காகவும், 30 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் கடல்கடந்து இரவு பகல் பாராது தொழில் முதலீட்டாளர்களையும், தமிழக தொழில் முதலீட்டாளர்களையும் சந்தித்து ரூ.8800 கோடிக்கு மேல் முதலீட்டை தமிழகத்திற்கு 37000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுத்;துள்ளார். இதற்கு ஸ்டாலின் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு வெள்ளை அறிக்கை வேண்டுமென்று கூறுகிறார். 5 முறை தி.மு.க ஆட்சியில் இருந்த பொழுது இது போன்ற முதலீட்டை ஈர்த்தது உண்டா என்பதை ஸ்டாலின் சிந்தித்து பார்க்க வேண்டும், நாங்கள் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வோம், பொங்கல் பரிசாக ரூ.1000 தருவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் கூறவில்லை, ஆனால் மக்களுக்கு நாங்கள் கொடுத்தோம்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விவசாயிகள் கடனை ரத்து செய்வோம், கல்விக்கடனை ரத்து செய்வோம் என்று பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றியது போல் ஸ்டாலின் மக்களிடத்தில் வாக்குறுதி அளித்தார். சொன்னது போல் அவர் செய்தாரா, அவரால் செய்ய முடியாது அது போலத்தான் வரும் உள்ளாட்சி தேர்தல்களிலும், அதன் பின் வரும் சட்டமன்ற தேர்தல்களிலும் கூட விண்வெளியில் வீடுகட்டிதருவோம் என்று கூட கூறி மக்களை ஏமாற்றுவார்கள் திமுக ஆட்சியில் 2 ஏக்கர் நிலம் தரப்படும் என்று கூறுpனார்கள் சொன்னது போல் மக்களுக்கு தந்தார்களா?, நாடு சுதந்திரம் அடைந்த பின் இது போன்ற எளிமையான முதலமைச்சரை நாங்கள் சந்தித்ததில்லை என்று மக்கள் கூறுவதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை அதனால் தான் எதையாவது ஒன்றை சொல்லி மக்களை குழப்ப பார்க்கிறார்கள் கடைசியில் அவரே குழம்பி போய்விடுவார். நிதிநிலை அறிக்கைக்கு வெள்ளை அறிக்கை வேண்டும் என்று கேட்கிறார், குடிமராமத்து திட்டத்திற்கு வெள்ளை அறிக்கை கேட்கிறார், 110 விதிக்கு வெள்ளை அறிக்கை கேட்கிறார். ஏனென்றால் ஸ்டாலினுக்கு வெள்ளை அறிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது என்று அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.