முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

47 வருடங்கள் கழித்து டிராவில் முடிந்த ஆஷஸ் தொடர்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் 1972-ம் ஆண்டுக்குப்பின் தற்போது 47 வருடங்கள் கழித்து டிரா ஆகியுள்ளது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. ஐந்தாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றதன் மூலம் ஆஷஸ் தொடர் 2-2 என டிராவில் முடிந்தது. தொடர் டிராவில் முடிந்தால் ஆஷஸ் கோப்பை, இதற்கு முந்தைய தொடரை யார் வென்றார்களோ, அவர்களிடம் ஒப்படைக்கப்படும். அதன்படி ஆஸ்திரேலியாவிடம் ஆஷஸ் கோப்பை வழங்கப்பட்டது. அதேசமயத்தில் இந்தத் தொடருக்கான டிராபி இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. 1972-ம் இங்கிலந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடர் 2-2 என டிரா ஆனது. அதன்பின் 47 ஆண்டுகள் கழித்து தற்போது டிரா ஆகியுள்ளது. 1972-ம் ஆண்டு இங்கிலாந்து ஆஷஸ் கோப்பையை தக்கவைத்தது. ஆனால், தற்போது ஆஸ்திரேலியா கோப்பையை தக்கவைத்துள்ளது. 1938, 1962-63, 1965-66, 1968-ல் நடந்த ஆஷஸ் தொடர்களும் டிராவில் முடிந்துள்ளன

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து