முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் படேல் சிலை அருகே பிறந்த நாள் கொண்டாடிய பிரதமர் - ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : குஜராத்தில் படேல் சிலை அருகே தனது 69-வது பிறந்த நாளை பிரதமர் மோடி கொண்டாடினார். அவருக்கு ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி நேற்று  தனது 69வது பிறந்த நாளை கொண்டாடினார். தனது பிறந்த நாளை குஜராத்தில்தான் முழுமையாக பிரதமர் மோடி கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து குஜராத்தில் காலை கேவாடியாவில் உள்ள பட்டாம்பூச்சி பூங்காவில் பையில் அடைக்கப்பட்ட வண்ண பட்டாம் பூச்சிகளை சுதந்திரமாக பறக்க விட்டு தனது பிறந்த நாள் நிகழ்ச்சிகளை தொடர்ந்தார். பிறந்த நாளையொட்டி குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கு சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார். சர்தார் சரோவர் அணை தனது முழுக் கொள்ளவை எட்டியுள்ளதால் அதையொட்டி நடைபெற்ற பூஜைகளிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.

பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு  சோனியா காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் , நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன் என்று சோனியா காந்தி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் சில ஹேஷ்டேக்குகளும் டிரெண்டிங் ஆகி வருகின்றன. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் பிரதமர் மோடி பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து