முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடிக்கு மலர்க்கொத்து அனுப்பி முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்க்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார்

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி நேற்று பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி மலர்க்கொத்துடன்  வாழ்த்துக் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தின் விவரம் பின்வருமாறு:

உங்களது இனிய பிறந்தநாளில் என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் ஆண்டவன் ஆசியோடும் தேசத்திற்கும் மக்களுக்கும் வலிமையோடு சேவையாற்ற வாழ்த்துகிறேன். இவ்வாறு அந்த வாழ்த்துசெய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து கவர்னர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், உங்களது பிறந்த நாளில் என்னுடைய இதயம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது அர்ப்பணிப்பு மிக்க தலைமை சிறந்த அணுகுமுறை, புதுமை மிக்க நிர்வாகத்திறனோடு வலிமையான இந்தியாவை உருவாக்க அடித்தளம் அமைத்து உலக தலைவராக விளங்குகிறார் பிரதமர், கடவுள் உங்களுக்கு மகிழ்ச்சியும் ஆரோக்கியத்தையும் வழங்கவும் நீண்ட ஆயுளுடன் நாட்டுக்கு சேவையாற்ற வாழ்த்துகிறேன். இவவாறு அந்த வாழ்த்து செய்தியில் கவர்னர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து