முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 உயர்வு: மீண்டும் 29,000-ஐ நெருங்குகிறது

புதன்கிழமை, 2 அக்டோபர் 2019      வர்த்தகம்
Image Unavailable

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 400 உயர்ந்து ரூ. 28,848க்கு விற்பனையானது.

தங்கத்தின் விலை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவாக சவரன் 30,000-ஐ தாண்டி விற்பனையானது. ஆனால், அமெரிக்கா - சீனா இடையே வர்த்தகப் போர் முடிவுக்கு வரும் சாதகமான சூழல் உள்ளதால் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இதன் எதிரொலியாக சென்னையில் நேற்று முன்தினம் காலையில் கிராமுக்கு ரூ. 43 குறைந்து ரூ. 3,545க்கு விற்பனையானது.

பின்னர், செப்டம்பருக்கான அமெரிக்க தொழில்துறை உற்பத்தி குறியீடு 47.8 சதவீதமாக குறைந்ததாக புள்ளி விவரம் வெளியானது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 1,463 டாலர் வரை சரிந்த தங்கம் மீண்டும் 1,471 டாலர் வரை உயர்ந்தது. இதனால் சென்னையில் ஆபரண தங்கம் மாலையில் கிராமுக்கு ரூ.11 உயர்ந்தது. இந்நிலையில் நேற்று காலை சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து ரூ.28,848-க்கு விற்பனையானது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து