முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-வங்கதேசம் இடையேயான கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில் சிக்கல்

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2019      விளையாட்டு
Image Unavailable

டாக்கா :  இந்தியா-வங்காளதேசம் இடையேயான கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வங்காளதேச கிரிக்கெட் அணி வரும் நவம்பர் 3-ம் தேதி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 3 இருபது ஓவர்கள் கொண்ட தொடரிலும், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்க உள்ளது. ஆனால், இந்தியா - வங்காளதேசத்துக்கு இடையேயான தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் தற்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  ஏனெனில், வங்காளதேச வீரர்கள் தங்கள் நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் 11 அம்சங்கள் கொண்ட கோரிக்கையை முன்வைத்து இருப்பதாகவும், கிரிக்கெட் வாரியம், கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் கிரிக்கெட் வாரியம் தொடர்பான எந்த நிகழ்வுகளிலும் பங்கேற்க மாட்டோம் என்று அந்நாட்டு வீரர்கள் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வங்காளதேச அணியின் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் அணியின் கேப்டன் சகிப் அல் ஹாசன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து