முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருந்தலாறு, வரதமா நதி அணைகளில் இருந்து நாளை முதல் 180 நாட்களுக்கு தண்ணீ்ர் திறப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

புதன்கிழமை, 23 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பழனி பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து நாளை 25-ம் தேதி முதல் 180 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் கால்வாய், ஆயக்கட்டு முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து 25 முதல் 130 நாட்களுக்கு தாடாகுளம் கால்வாய் ஆயக்கட்டுக்கு உட்பட்ட பாசன நிலங்களின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் உள்ள 844 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரதமாநதி...

மேலும் திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் வரதமாநதி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேளாண் பெருமக்களுக்கு வந்த கோரிக்கைகளுக்கு ஏற்ப வரதமா நதி அணையில் இருந்து முதல்போக சாகுபடிக்கு நாளை முதல் 127 நாட்களுக்கு பாப்பன் வாய்க்கல் பெரிய வாய்க்கால் பழனி வாய்க்கால், மற்றும் 18 பாசன குளங்களின் பாசன வசதிக்காக தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 5523.18 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து