எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூரு : கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பில் 2009-ம் ஆண்டில் இருந்து கர்நாடக பிரீமியர் லீக் (கே.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 8-வது கே.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த ஆகஸ்டு மாதம் நடந்து முடிந்தது.
7 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதி ஆட்டத்தில் உப்பள்ளி (ஹூப்ளி) டைகர்ஸ் அணி 8 ரன் வித்தியாசத்தில் பல்லாரி டஸ்கர்சை தோற்கடித்து சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. இதில் உப்பள்ளி நிர்ணயித்த 153 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பல்லாரி அணி 20 ஓவர்களில் 144 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இந்த ஆண்டில் கே.பி.எல். போட்டி மீது சூதாட்ட சர்ச்சை வெடித்தது. குறிப்பிட்ட சில வீரர்கள் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்கக்கூடிய வகையில் ‘மேட்ச் பிக்சிங்’கில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பான ஆதாரங்களை திரட்டி விசாரணையை முடுக்கி விட்ட பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே பெலகாவி பாந்தர்ஸ் அணியின் உரிமையாளரான அலி அஷ்பாக், சூதாட்ட தரகர் பாவேஷ் பக்னா, பெங்களூரு பிளாஸ்டர்ஸ் பந்துவீச்சு பயிற்சியாளர் வினு பிரசாத், அந்த அணியின் பேட்ஸ்மேன்களான விஸ்வநாதன், நிஷாந்த் சிங் ஆகியோரை கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக பல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான சி.எம்.கவுதம், ஆல்-ரவுண்டர் அப்ரார் காஜி ஆகியோர் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
முதல்தர கிரிக்கெட் வீரரான 33 வயதான சி.எம்.கவுதம் இந்திய ‘ஏ’ அணிக்காகவும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகளுக்காகவும் விளையாடி இருக்கிறார். ரஞ்சி கிரிக்கெட்டில் ராபின் உத்தப்பா, மயங்க் அகர்வால், மனிஷ் பாண்டே, லோகேஷ் ராகுல், வினய்குமார் போன்ற நட்சத்திர வீரர்களுடன் இணைந்து கர்நாடக அணியில் ஆடியிருக்கிறார். சொந்த மாநில அணியோடு 9 ஆண்டுகள் பயணித்த சி.எம்.கவுதம் இந்த சீசனில் கர்நாடகா அணியில் இருந்து விலகி கோவா அணிக்கு மாறினார். முதல்தர போட்டியில் 94 ஆட்டங்களில் பங்கேற்று 10 சதங்கள் உள்பட 4,716 ரன்கள் சேர்த்துள்ளார். நேற்று தொடங்கிய சையத் முஸ்தாக் அலி கோப்பை போட்டிக்கான கோவா அணியின் கேப்டனாக கவுதம் நியமிக்கப்பட்டு இருந்தார். கைது எதிரொலியாக அவரது ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப்பட்டு, உடனடியாக கோவா அணியில் இருந்தும் கழற்றி விடப்பட்டு இருக்கிறார்.
ஆல்-ரவுண்டரான 30 வயதான அப்ரார் காஜி, பேட்டிங் மட்டுமின்றி சுழற்பந்தும் வீசக்கூடியவர். முதல்தர கிரிக்கெட்டில் முதலில் கர்நாடக அணிக்காக ஆடிய அப்ரார் காஜி, பிறகு வடகிழக்கு மாநிலமான நாகலாந்து அணிக்கு மாறினார். கடந்த சீசனில் மிடில் வரிசையில் இறங்கி மூன்று முறை 150 ரன்களுக்கு மேல் குவித்து அசத்தினார். முதல்தர கிரிக்கெட்டில் 17 ஆட்டங்களில் ஆடி 1,136 ரன்களும், 48 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இந்த சீசனில் மிசோரம் அணிக்கு தாவினார். சமீபத்தில் நடந்த விஜய்ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் மிசோரம் அணிக்காக கால் பதித்தார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஒரே ஒரு ஆட்டத்தில் ஆடியிருக்கிறார்.
இவர்கள் இருவரும் கே.பி.எல். தொடரின் இறுதி ஆட்டத்தில் ‘மேட்ச் பிக்சிங்’கில் ஈடுபட்டதாக பெங்களூரு மாநகர கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தெரிவித்தார். மந்தமாக பேட்டிங் செய்வதற்காக தலா ரூ.20 லட்சத்தை சூதாட்ட தரகர்களிடம் இருந்து வாங்கியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இறுதி ஆட்டத்தில் கவுதம் 37 பந்தில் 2 பவுண்டரியுடன் 29 ரன் எடுத்த நிலையில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். காஜி 6 பந்தில் 13 ரன் எடுத்து ரன்-அவுட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியிலும் அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சூதாட்ட தரகர்கள் 2 பேர் துபாயில் பதுங்கி இருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இவர்கள் 2 பேரையும் கைது செய்வதற்கு வசதியாக அவர்கள் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் 2 பேருக்கும் சர்வதேச கிரிக்கெட் அணிகளில் விளையாடும் வீரர்களுடன் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும், மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூடுதல் கமிஷனர் சந்தீப் பட்டீல் தெரிவித்துள்ளார்.
கே.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட கைது நடவடிக்கை பற்றி பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் அளித்த பேட்டியில், ‘கர்நாடக பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்டம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் சிலர் வீரர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களை கைது செய்ய வேண்டாம் என்று நெருக்கடி கொடுக்கிறார்கள். ஆனால் எந்த நெருக்கடிக்கும் பயப்படாமல் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகிறோம்’ என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.