முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தூர் மைதானத்தில் பிங்க் பந்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சி

செவ்வாய்க்கிழமை, 12 நவம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா : கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்தூர் மைதானத்தில் இரவு பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

இந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இந்தூரில் நாளை (14-ந்தேதி) தொடங்குகிறது. கடந்த 10 -ந் தேதி டி - 20 கிரிக்கெட் தொடர் முடிவடந்த நிலையில், இந்தூர் சென்ற இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. 22 - ந்தேதி கொல்கத்தாவில் தொடங்கும் 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக நடக்கிறது. முதல் டெஸ்டிற்கும் 2-வது டெஸ்டிற்கும் இடையிலான இடைவெளி மிகக்குறைவாக இருப்பதால் இந்தூரிலேயே பிங்க் பந்தில் பயிற்சி எடுக்க இந்தியா விரும்பியது.இதனால் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வெளிச்சத்திற்கு கீழ் பயிற்சி எடுக்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்து தரும்படி மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்திடம் கேட்டுக்கொண்டது. அதன்பேரில் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து