எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ராமேஸ்வரத்தில் குருநானக் நினைவை போற்றும் வகையில் மையம் அமைக்க இடம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
மகான் குருநானக்கின் 550 - வது ஜெயந்தி விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரும், 10 சீக்கிய மத குருக்களில், முதன்மையானவருமான குருநானக் தேவ் ஜி-யின் 550 - வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமைப்படுகின்றேன். மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். குருநானக் அவர்களின் பிறந்தநாள், ஒவ்வொரு வருடமும் நவம்பர் 12ஆம் நாள் “குருநானக் ஜெயந்தி” மற்றும் குருநானக் தேவ் பிரகாஷ் திவஸ்’’ என விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை வழங்கிய சீக்கிய சகோதர சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உலகில் ஏறக்குறைய 270 லட்சம் சீக்கியர்கள் வாழ்கின்றனர். இது உலக மக்கள் தொகையில் 0.39 சதவீதம் ஆகும். இந்தியாவில் 190 லட்சம் சீக்கியர்கள் வாழ்கின்றனர். இது இந்திய மக்கள் தொகையில் 2 சதவீதம் ஆகும். சீக்கியர்கள் கொள்கை ரீதியாக, நம்பகமான, விசுவாசமான, தேசபக்தி மிகுந்த கடின உழைப்பாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் சீக்கியர்களின் பங்கு மிக முக்கியமானது.சீக்கிய மதம் நாடு, மொழி மற்றும் இனப்பாகுபாடுகளைத் தாண்டி, மனித இனத்திற்கு சிறந்த நெறிமுறைகளை வழங்கியுள்ளது. மதசார்பற்ற வாழ்க்கையை ஆன்மீக வாழ்க்கையோடு இணைந்து வாழ வேண்டும் எனவும், இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை அறிந்து, இறைவனை அடைய முயல்வதே மனித வாழ்வின் குறிக்கோள் எனவும் சீக்கிய மதம் போதிக்கிறது.
மனித வாழ்க்கையில் எந்த ஒரு மனிதனையும் பொருளாதார ஏற்றத்தாழ்வு பார்க்காமல், சமமாகக் கருத வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. இதனைப் போதிக்கும் வகையில் அனைத்து குருத்வாராக்களிலும் நடத்தப்படும் “லங்கார்’, அனைவருக்கும் ஒரே வகையான உணவு வழங்கும் நிகழ்ச்சியானது சிறப்புமிக்கது. குருநானக் தேவ்ஜி 1499 -ம் ஆண்டு தன்னுடைய 30 - வது வயதில் ஞானம் பெற்று தெய்வீக நிலையை அடைந்தார். தன்னுடைய போதனைகளால் மக்களை நல்வழிப்படுத்தி, அவர்களிடையே நிலவி வந்த மூடப் பழக்கவழக்கங்களைக் களைந்தார். பெண்கள் சமுதாயத்தின் கண்கள் எனவும், அவர்களைப் போற்றி மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். சமத்துவம், சகோதரத்துவம், நற்குணம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவம் வாய்ந்த ஆன்மீக, சமூக, அரசியல் தளத்தை உருவாக்கி நேர்மையாக வாழவேண்டும் என குருநானக் போதித்துள்ளார். குருநானக்கின் வாழ்வியல் நெறிமுறைகளைப் பின்பற்றி நடப்போம் எனக் கூறி, குருநானக் ஜெயந்தி நாளான இன்று அவரை வணங்கி, நான் பங்கேற்பதற்கு வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மற்றும் தமிழகத்தில் வாழும் சீக்கிய சகோதரர்கள், பல்வேறு கோரிக்கைகளை என்னிடம் வைத்துள்ளார்கள். அவற்றுள் ராமேஸ்வரத்தில், மகான் குருநானக் அவர்கள் ராமேஸ்வரத்திற்கு புனித யாத்திரை மேற்கொண்ட நினைவைப் போற்றும் வகையில் ‘மையம்’ ஒன்று அமைப்பதற்கு இடம் தேவை என்று கேட்டுள்ளீர்கள். அவர்களுடைய கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசால் மையம் ஒன்று அமைக்க இடம் வழங்கப்படும். மற்ற கோரிக்கைகள் அனைத்தும் அரசினுடைய பரிசீலினையில் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் வாழ்கின்ற அனைத்து சீக்கிய சகோதர, சகோதரிகளுக்கும் தமிழக மக்கள் என்றைக்கும் துணை நிற்பார்கள், தமிழ்நாடு அரசும் அவர்களுக்குத் துணை நிற்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.