முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மீது அவதூறு: காங். மன்னிப்பு கேட்க வேண்டும் என ராஜ்நாத்சிங் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

தாவாங் : ரபேல் போர்விமானக் கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் மோடி மீது அவதூறு பரப்ப முயன்ற காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கோர வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரபேல் போர் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் ரூ.58 ஆயிரம் கோடிக்கு அதிகமாக விலை வழங்கப்பட்டுள்ளதாகவும் விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.

இந்நிலையில், ரபேல் ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என்ற பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ரபேல் போர்விமானக் கொள்முதலில் எந்தவிதமான ஊழலும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்,வினித் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், நேற்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீரப்பில், ரபேல் போர்விமானக் கொள்முதலில் எந்தவிதமான தவறும் நடக்கவில்லை. சி.பி.ஐ. விசாரணைக்கும் உத்தரவிட வேண்டியது இல்லை. முதல் தகவல் அறிக்கையும் அவசியமில்லை எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் எந்தவிதமான தவறும் செய்யவில்லை என்பதை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது

இந்த தீர்ப்பு தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நிருபர்களுக்கு அருணாச்சலப்பிரதேசம் தாவாங் நகரில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

ரபேல் போர்விமானக் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு ஒன்றுமில்லாமல் போனது. இது பிரதமர் மோடி தலைமையிலான அரசின் மீது அவதூறு பரப்பும் முயற்சியாகும். இந்த தேசத்தின் மக்கள் நிச்சயம் காங்கிரஸ் கட்சியை அதனுடைய விஷமத்தனமான, அவதூறுப் பிரச்சாரத்துக்காக மன்னிக்க மாட்டார்கள். மக்களைத் தவறாக வழிநடத்தியதற்காக மன்னிப்புக் கோர வேண்டும். ரபேல் விமானக் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக சில அரசியல் கட்சிகள் கூறும் குற்றச்சாட்டு துரதிர்ஷ்டமானது, ஆதாரமற்றது, திட்டமிட்டு அவதூறு பரப்பக்கூடியது. இந்த தீர்ப்பின் மூலம் இனிமேல் அந்த அரசியல்வாதிகள் மிகுந்த கவனத்துடன் எந்த கருத்தையும் கூற வேண்டும் என உணர்த்தியுள்ளது.ரபேல் போர்விமானக் கொள்முதல் மிகவும் வெளிப்படையாக நடந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உயர்த்தும் நோக்கிலும், அவசரத்தை மனதில் வைத்தும் இந்த கொள்முதலைச் செய்துள்ளோம்

தேசபாதுகாப்பு மற்றும் பாதுகாப்பின் தரத்தை உயர்த்தும் விஷயத்தில் எந்தவிதமான அரசியலும் கூடாது. ரபேல் சீராய்வு மனுக்களைத் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் வழங்கிய இந்த தீர்ப்பை முழுமையாக நான் வரவேற்கிறேன். இதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் நிலைப்பாடு சரியானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்த முடிவு எடுத்தலிலும் வெளிப்படைத்தன்மையுடன் மோடி அரசு செயல்படுகிறது என்பதை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளிக்காட்டுகிறது. இவ்வாறு ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து