முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலிபோர்னியா பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் பலி

வெள்ளிக்கிழமை, 15 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டா கிளாரிட்டா காலிப் எனும் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் பலியானார்கள்.

அமெரிக்காவில்  பள்ளி மாணவர் ஒருவர் தனது 16-வது பிறந்தநாளில்  பள்ளி  வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினார். 16 வயது சிறுமியையும் 14 வயது சிறுவனையும் கொன்றதுடன், மேலும் மூன்று பேரை சுட்டு காயப்படுத்தி விட்டு,  தன்னுடைய தலையில் சுட்டுக் கொண்டார்.  கருப்பு ஆடை அணிந்த வந்த அந்த  சிறுவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் வகுப்புகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்தனர். பள்ளி அறைகளில் மாணவர்கள் பதுங்கிக் கிடந்த நிலையில் பெற்றோர் பெரும் பதற்றத்துடன் என்ன நடக்கிறது என்று புரியாமல் காத்திருந்தனர். ஒருவழியாக துப்பாக்கியால் சுட்டவனை போலீசார் சுற்றி வளைத்தனர். அவனை சுட்டுப் பிடித்துள்ள போலீசார் ஏன் அப்படி செய்தான் என்று விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வரும் நிலையில் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளிகளில் மாணவர்களுக்கு இதுபோன்ற நேரங்களில் என்ன செய்வது என்பதற்கான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு பள்ளி வளாகத்தில் நடந்த  85-வது துப்பாக்கிச் சூடு  சம்பவம் இதுவாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து